470 கிளாம்பாக்கத்தில் ரெடியா நிக்குது மக்களே.. சுதந்திர தினம் + தொடர் விடுமுறை.. தமிழக அரசு அதிரடி
சென்னை: சுதந்திர தின விடுமுறை சிறப்பு பேருந்துகள் குறித்த அறிவிப்பை, தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது..., அத்துடன், இப்பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது குறித்தும் தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
பணிநிமித்தம், கல்வி, உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, சொந்த ஊரிலிருந்து பொதுமக்கள் நகரங்களுக்கு கிளம்பி செல்வது வழக்கமான ஒன்றுதான்.. அதன்படி, சென்னை, கோவை, திருச்சி, திருப்பூர் போன்ற தொழிற்நகரங்களில் வெளியூர் மக்கள் ஏராளமானோர் தங்கியிருக்கிறார்கள்.

இவர்கள் வார இறுதி நாட்களில் அல்லது பண்டிகை நாட்களில் அல்லது தொடர் விடுமுறை நாட்களில், அவரவர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதும் இயல்பான விஷயமே. அந்தவகையில், தற்போது வாரவிடுமுறை ஆரம்பமாகி உள்ளது..
ஆடி மாதம்: தொடர்ந்து அடுத்தடுத்து விடுமுறை தினங்களாக வரும் நிலையில், பலரும் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டு வருகின்றனர். அதுவும் இல்லாமல் ஆடி மாதம் முழுவதுமே திருவிழா மாதமாக இருப்பதால், சொந்த ஊரில் கொடை விழா, கோவில் திருவிழா என்று பலரும் தங்களது பயணத்தை திட்டமிட்டு வருகின்றனர்.
அந்தவகையில் சுதந்திர தினம் மற்றும், சனி, ஞாயிறு தொடர் விடுமுறையை முன்னிட்டு இன்று ஆகஸ்ட் 14ம் தேதி முதல் ஆகஸ்ட் 18ம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது... இதற்கான முன்பதிவும் நடந்து கொண்டிருப்பதால், சிறப்பு பேருந்துகள் குறித்த அறிக்கையை போக்குவரத்து துறை விடுத்துள்ளது.
கிளாம்பாக்கம்: "சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்று ஆகஸ்ட் 14ம் தேதி 470 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதே போன்று ஆகஸ்ட் 16,17 தேதிகளில் இந்த மாவட்டங்களுக்கு 365 பேருந்துகளும், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, வேளாங்கண்ணி, பெங்களூரு, நாகை, ஓசூர் போன்ற இடங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
அதே போன்று பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்புப் பேருந்துகளும், மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஆகஸ்ட் 14, 16, 17, 18 ஆகிய நாட்களுக்கு 20 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.
முன்பதிவு: ஆகஸ்ட் 18ம் தேதி ஞாயிறன்று சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை, பெங்களூரு திரும்ப வசதியாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாகவும், www.tnstc.in மற்றும் மொபைல் செயலி மூலம் பொதுமக்கள் இந்த பேருந்துகளில் பயணிக்க முன்பதிவு செய்து கொள்ளுமாறு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவையில் இருந்து 200 சிறப்புப் பேருந்துகளும், மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஆகஸ்ட் 14, 16, 17, 18 ஆகிய நாட்களுக்கு 20 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. ஆகஸ்ட் 18ம் தேதி ஞாயிறன்று சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை, பெங்களூரு திரும்ப வசதியாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதால், www.tnstc.in மற்றும் மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்யலாம்
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications