கிளாம்பாக்கத்துக்கு யோகம்.. பொத்தேரியில் விரைவில் ஆரம்பம்.. ஜிஎஸ்டி ரோடு பிஸி.. சென்னைவாசிகள் ஹேப்பி
சென்னை: கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு திறக்கப்பட்டதையடுத்து, பொத்தேரிக்கு மவுசு கூடிவருகிறது.. இப்போது இன்னொரு குட்நியூஸ் ஜிஎஸ்டி சாலைக்கு எழுந்துள்ளது.. என்ன காரணம்?
ரயில்வே துறைக்கு வருமானம் ஈட்டவேண்டுமானால், ரயில் பயணிகளின் கட்டணத்தை உயர்த்துவது வழக்கம்.. ஆனால், சமீபகாலமாகவே கட்டணம் உயர்த்தப்படவில்லை..

அதற்கு பதிலாக, ரயில் பயணிகளின் கட்டணத்தை உயர்த்தாமல், அதேசமயம் வருவாயையும் ஈட்டுவதற்காகு ரயில்வே நிர்வாகம் முயற்சி எடுத்துவருகிறது... இதற்காக, தனியாருடன் இணைந்து சரக்கு ரயில் சேவையை அதிகரிப்பது, ரயில்வேயில் உள்ள காலி இடங்களை வணிக நோக்கில் வாடகைக்கு விடுவது போன்ற அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம், கட்டணமில்லா வருவாயும் கணிசமாக ஈட்டப்பட்டு வருகிறது.
உணவகம்: அந்த வகையில், காலி ரயில் பெட்டிகளை உணவகமாக மாற்றி, ரயில் நிலையத்தில் உணவகம் நடத்த தொழில் முனைவோருக்கு வாய்ப்பு வழங்க திட்டமிடப்பட்டது.. இதற்காக, கடந்த வருடம் தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட சென்னை சென்ட்ரல், பெரம்பூர் மற்றும் பொத்தேரி ஆகிய 3 ரயில்வே ஸ்டேஷன்களில் ரயில் பெட்டி உணவகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த ரயில் நிலையங்களில் ரயில் பெட்டி உணவகம் அமைப்பது தொடர்பாக மின்னணு ஏலம் முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும், இதற்காக 2 வருடத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, ஏலமும் முடிந்து, 3 நிலையங்களில் ரயில் பெட்டி உணவகம் அமைக்க தனியாருக்கு ஒப்பந்தமும் வழங்கப்பட்டுள்ளது.. இந்த உணவகம் 24 மணி நேரமும் செயல்படும் என்றும் உறுதி தரப்பட்டிருந்தது.
உணவகம்: இதில், சென்ட்ரலில் உணவகம் திறக்கப்பட்டுவிட்ட நிலையில், பொத்தேரியில் ரயில் நிலையத்தை ஒட்டி புதியதாக ரயில் பெட்டி உணவகம் விரைவில் திறக்கப்பட உள்ளது. 2 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ரூ.1.5 கோடி செலவில் உருவான இந்த ரயில் பெட்டி உணவகத்துக்கு "ரூட் 32" என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த உணவகத்தில், பழைய ரயில் பெட்டிக்கு புதுவண்ணம் தீட்டப்பட்ள்ளது.. , உள்பகுதியில் மரபலகைகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது.. தென்னிந்திய வகைகள் மட்டுமின்றி, சைனீஸ், இத்தாலிய உணவு வகைகளும் இங்கு வழங்கப்பட உள்ளன. ஜிஎஸ்டி சாலை வழியே பயணிக்கும் வாகன ஓட்டிகள், ரயில் பயணிகள் என அனைவருக்குமே இந்த உணவகம் பயனளிக்க போகிறது..
சபாஷ்: அதுவும் இல்லாமல், கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு திறக்கப்பட்டு விட்டதால், பொத்தேரி ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்துள்ளது.. எனவே அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பையும் இந்த ரயில்வே ஹோட்டல் பூர்த்தி செய்யும் என்று நம்பப்படுகிறது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
ஆண்டவரையே திகைக்க வைத்த அறிவாலயம்.. கமல்ஹாசன் எடுத்த கடைசி அஸ்திரம்! மநீம கூட்டத்தில் முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications