Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிளாம்பாக்கத்தில் கஷ்டப்பட வேணாம்.. 690 சிறப்பு பஸ்கள்.. பயணிகளுக்கு குட் நியூஸ் தந்த தமிழக அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: முகூர்த்த நாள் மற்றும் வார விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டும் பிற ஊர்களுக்கு மொத்தம் 690 சிறப்பு பஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதேபோல் சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூருக்கும் சிறப்பு பஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தங்கி வேலை பார்த்து வரும் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பண்டிகை மற்றும் முகூர்த்த நாட்களில் சொந்த ஊர் சென்று வருவது வழக்கம். இதேபோல் வார விடுமுறை சமயத்திலும் சொந்த ஊர் சென்று வருவார்கள். இதனால் வெள்ளிக்கிழமை மாலை நேரங்களில் சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள், ரயில்களில் கூட்டம் அலைமோதும்.

Kilambakkam special bus TNSTC

சிறப்பு பஸ்களை அறிவித்த தமிழக அரசு

ஆம்னி பஸ்களிலும் டிக்கெட் கட்டணம் அதிகம் இருக்கும் என்பதால் சாதாரண மக்கள் பலரும் அரசு விரைவு பஸ்களையே நம்பியிருப்பார்கள். இதனால் பஸ்களில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. அதன்படி, கூட்ட நெரிசலை குறைக்க தமிழக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் அறிவிக்கப்படும். அந்த வகையில் தற்போது கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டும் வெளி ஊர்களுக்கு 690 சிறப்பு பஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

14/11/2025 (வெள்ளிக்கிழமை) 15/11/2025 (சனிக்கிழமை) மற்றும் 16/11/2025 (ஞாயிற்றுக் கிழமை முகூர்த்தம்) மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிளாம்பாக்கத்தில் இருந்து

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 14/11/2025 [வெள்ளிக்கிழமை] அன்று 340 பேருந்துகளும், 15/11/2025 (சனிக்கிழமை) 350 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கோயம்பேட்டில் இருந்து

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 14/11/2025 வெள்ளிக் கிழமை அன்று 55 பேருந்துகளும் 15/11/2025 சனிக்கிழமை அன்று 55 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 100 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதாவரத்திலிருந்து 14/11/2025 மற்றும் 15/11/2025 ஆகிய நாட்களில் 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்யுமாறு அறிவுறுத்தல்

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 7,227 பயணிகளும் சனிக்கிழமை 2,975 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 7,563 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+