ஊட்டி கோர்ட்டில் இன்று கொடநாடு கேஸ் விசாரணை! பரபரக்கும் நீலகிரி! மீண்டும் கொடநாடு பங்களாவில் ஆய்வு?
சென்னை: கொடநாடு பங்களாவை ஆய்வு செய்ய வேண்டும் என வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 10வது குற்றவாளியான ஜித்தின் ஜாய் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இதற்கு அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.. இதையடுத்து, கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 26ம் தேதிக்கு உதகை மாவட்ட நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது. அந்தவகையில், இன்றைய தினம் மீண்டும் விசாரணை நடைபெற உள்ளதாக தெரிகிறது. இது மிகுந்த எதிர்பார்ப்பை தமிழகத்தில் ஏற்படுத்தி வருகிறது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த கொடநாடு பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட்டில் கடந்த 2017ம் வருடம், ஏப்ரல் 23ம் தேதி கொலை, கொள்ளை நடந்தது..

ஊட்டி கோர்ட்டில் விசாரணை
இந்த குற்றங்கள் தொடர்பாக சயான் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்திருந்தனர்.. இது தொடர்பான வழக்கு ஊட்டி ஒருங்கிணைந்த கோர்ட்டில் கடந்த ஏழு வருடங்களாக நடந்து வருகிறது. ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையில் தொடர்ந்து நடைபெற்று வரும் விசாரணையில் இதுவரை 250 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் நடைபெற்ற எஸ்டேட் பங்களாவில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கடந்த 2023ம் ஆண்டு குற்றவாளிகள் சார்பில் அளிக்கப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
மறுபடியும் பங்களாவை ஆய்வு செய்ய வேண்டும்
மீண்டும் பங்களாவை ஆய்வு செய்ய வேண்டும் என வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 10வது குற்றவாளியான ஜித்தின் ஜாய் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு அரசு தரப்பு வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் மாதம் கடந்த 14ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டிருந்தார்..
அதன்படியே கடந்த 14ம் தேதி, இந்த வழக்கின் விசாரணை ஊட்டி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்தது.. அப்போது குற்றம் சாட்டப்பட்டுள்ள கேரளாவைச் சேர்ந்த ஜித்தின் ஜாய் நேரில் ஆஜரானார்.
அதேபோல, அரசு தரப்பு வழக்கறிஞர்களான ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோரும், சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான சிபிசிஐடி போலீசாரும் ஆஜராகினர்.
இன்று மீண்டும் விசாரணை
அப்போது அரசு தரப்பில் வாதிடும்போது, "இந்த வழக்கில் கூடுதல் சாட்சி விசாரணை மேற்கொள்ள வேண்டி உள்ளதால் கால அவகாசம் வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 26ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படியே இன்றைய தினம் மீண்டும் இவ்வழக்கின் விசாரணை நடைபெற உள்ளது.. இது தமிழக அரசியலில் மிகுந்த எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications