கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு:எடப்பாடியின் வலது கரம் சேலம் இளங்கோவனை விசாரணைக்கு அழைக்க போலீஸ் முடிவு?
சென்னை: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வலதுகரமான சேலம் இளங்கோவனை விசாரணைக்கு அழைக்க போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் மறு விசாரணை படுமும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. கோடநாடு வழக்கில் மர்ம முடிச்சுகளாக இருக்கும் மரணங்கள் தொடர்பாக தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த விசாரணையின் போக்குகள் பொதுவாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் இவ்வழக்கின் ஒவ்வொரு நகர்வும் பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக இருக்கிறது.

மறுவிசாரணை தீவிரம்
கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் யார் யாருக்கு எல்லாம் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறதோ அத்தனை பேரையுமே விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து விசாரித்து வருகிறது போலீஸ். ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக இருந்த கனகராஜின் மர்ம மரணம்தான் மிக முக்கியமானதாகவும் பார்க்கப்படுகிறது. கனகராஜூடன் கடைசிவரை போனில் பேசிக் கொண்டிருந்த எடப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர், வழக்கறிஞர் ஆகியோரும் விசாரணை வளையத்தில் உள்ளனர்.

சேலத்தில் சயான்
மேலும் கோடநாடு பகுதியை விட்டு வெளியேறிய சஜீவன் மற்றும் சயான் இருவரும் முதலில் சென்றது கோவைக்கு... சயானை கோவைக்கு அனுப்பி விட்டு, சஜீவன் மட்டும் சேலம் சென்றுள்ளார். அங்கு எடப்பாடி பழனிசாமிக்கு எல்லாமுமாக இருக்கும் சேலம் கூட்டுறவு இளங்கோவனின் நட்பில் இருக்கும் ஒரு வழக்கறிஞரை சந்தித்து பேசியிருக்கிறார். அவரிடம் சில முக்கிய ஆவணங்களை சஜீவன் ஒப்படைத்திருக்கிறார்.

அடுத்தது சேலம் இளங்கோவன்?
சஜீவனுடனான சந்திப்புக்குப் பின்னர் அந்த வழக்கறிஞர் முக்கிய ஆவணங்களை எடுத்துக் கொண்டு போனது சேலம் இளங்கோவனிடம்... இவ்வளவும் போலீசார் நடத்திய மறு விசாரணையில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால் அடுத்த கட்ட விசாரணை சேலம் இளங்கோவன்தான் எனவும் கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல்?
சேலம் இளங்கோவனிடம் விசாரணை நடத்தப்பட்டால் அதற்கு அடுத்ததாக மாஜி முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான். இதனால் அதிமுக தரப்பு ரொம்பவே ஆடிப் போயிருக்கிறது. கனகராஜின் உறவினர்கள், கோடநாடு சிசிடிவி ஆபரேட்டர் தினேஷின் பெற்றோர், உறவினர்கள் என அனைவரும் கிளிப்பிள்ளை போல சொல்லிக் கொடுத்ததையே திரும்ப திரும்ப ஊடகங்களில் சொல்லி வருகின்றனர். போலீசிடமும் இதனையே தெரிவித்தோம் என்கின்றனர். மேலோட்டமாக இது அதிமுக தரப்புக்கு நம்பிக்கையை தந்தாலும் சேலம் இளங்கோவன் சொல்லப் போகும் தகவல்கள்தான் முக்கியமானவை என்கின்றன போலீஸ் வட்டாரங்கள்.
-
விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி அறிவித்த எடப்பாடி! ஆனா 5 பவுன் நகை கடன் ரத்து இல்லையே! -
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications