கொடநாடு வழக்கு: எடப்பாடியின் முதன்மை பாதுகாப்பு அதிகாரிக்கு சம்மன்
சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று, ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமியின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரபெருமாளுக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இச்சம்பவம் தொடர்பாக சயான், வாளையார் மனோஜ், ஜிதின் ஜாய், ஜம்ஷேர் அலி, மனோஜ் சாமி உள்பட 10 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கோவையில் உள்ள அலுவலகத்தில் சிபிசிஐடி போலீஸார் 250-க்கும் மேற்பட்டவர்களை நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தொடர்ந்து, அவர்களது வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. கொடநாடு எஸ்டேட்டில் பல ஆண்டுகளாக மேலாளராகப் பணியாற்றி வந்தவர் நடராஜன். இந்த கொலை, கொள்ளை தொடர்பாக அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கும் என்பதால் கோவை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நடராஜனிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
நடராஜனிடம் 8 மணி நேரம் போலீஸார் விசாரணை செய்சதனர். போலீஸார் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் அவர் அளித்த பதிலை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். மேற்கொண்டு விசாரணைக்கு அழைத்தால் வராமல் ஆஜராக வேண்டும் என்றும் அவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, கொலை கொள்ளை சம்பவத்தின்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரபெருமாளுக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது.
மார்ச் 11 ஆம் தேதியன்று வீரபெருமாள் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவத்தின்போது பாதுகாப்புப் பிரிவின் ஆய்வாளராக இருந்தவர் கனகராஜ். இறுதியாக விபத்தில் உயிரிழந்த ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜுக்கு குறுஞ்செய்தி அனுப்பியது மற்றும் இதுவரை தனது சொல்போனை ஒப்படைக்காதது குறித்தும் வீரபெருமாளிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications