கொடநாடு வழக்கு: எடப்பாடியின் முதன்மை பாதுகாப்பு அதிகாரிக்கு சம்மன்
சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று, ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமியின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரபெருமாளுக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இச்சம்பவம் தொடர்பாக சயான், வாளையார் மனோஜ், ஜிதின் ஜாய், ஜம்ஷேர் அலி, மனோஜ் சாமி உள்பட 10 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கோவையில் உள்ள அலுவலகத்தில் சிபிசிஐடி போலீஸார் 250-க்கும் மேற்பட்டவர்களை நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தொடர்ந்து, அவர்களது வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. கொடநாடு எஸ்டேட்டில் பல ஆண்டுகளாக மேலாளராகப் பணியாற்றி வந்தவர் நடராஜன். இந்த கொலை, கொள்ளை தொடர்பாக அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கும் என்பதால் கோவை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நடராஜனிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
நடராஜனிடம் 8 மணி நேரம் போலீஸார் விசாரணை செய்சதனர். போலீஸார் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் அவர் அளித்த பதிலை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். மேற்கொண்டு விசாரணைக்கு அழைத்தால் வராமல் ஆஜராக வேண்டும் என்றும் அவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, கொலை கொள்ளை சம்பவத்தின்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரபெருமாளுக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது.
மார்ச் 11 ஆம் தேதியன்று வீரபெருமாள் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவத்தின்போது பாதுகாப்புப் பிரிவின் ஆய்வாளராக இருந்தவர் கனகராஜ். இறுதியாக விபத்தில் உயிரிழந்த ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜுக்கு குறுஞ்செய்தி அனுப்பியது மற்றும் இதுவரை தனது சொல்போனை ஒப்படைக்காதது குறித்தும் வீரபெருமாளிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications