2 பக்கமும் வளைக்க பிளான்.. "கிடைக்கிற கேப்பில் எல்லாம்".. எடப்பாடிக்கு "கேட்" போடும் திமுக? போச்சே!
சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரம் அடைந்து வரும் நிலையில்.. அதிமுக சம்பந்தப்பட்ட இரண்டு 2 முக்கியமான வழக்குகள் மீதான விசாரணைகள் தீவிரம் அடைந்து உள்ளன.
Recommended Video
அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை உச்சம் அடைந்து உள்ளது. எடப்பாடி பழனிசாமி எப்படியாவது ஒற்றை தலைமையை பெற்றுவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்.
இன்னொரு பக்கம் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் ஒற்றை தலைமைக்கு குறுக்கே நிற்கும் நிலையில், இன்றிலிருந்து தென் மாவட்டங்களுக்கு பயணம் செய்து ஆதரவு திரட்டும் நோக்கத்திலும் ஓ பன்னீர்செல்வம் இருக்கிறார்.

கோடநாடு
இந்த நிலையில்தான் தற்போது கோடநாடு வழக்கில் விசாரணை சூடு பிடித்துள்ளது. அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆக எடப்பாடி பழனிசாமி தீவிரம் காட்டி வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் எடப்பாடி பழனிசாமி ஒருவேளை பொதுச்செயலாளர் ஆனால் அவருக்கு எதிரான வழக்குகளை ஆளும் திமுக தோண்டி எடுக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடுகின்றன. எடப்பாடி அதிமுக தலைமை பதவியை ஏற்றால்.. திமுகவிற்கு கடும் போட்டி நிலவும் வாய்ப்புகள் உள்ளன.

எடப்பாடி கோடநாடு
எடப்பாடியை முடக்கும் வகையில் திமுக முக்கியமான சில வழக்குகளை கையில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில்தான் தற்போது எடப்பாடிக்கு எதிரான வழக்காக கருதப்படும் கோடநாடு வழக்கில் விசாரணை வேகம் எடுத்துள்ளது. கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் அடுத்த கட்ட விசாரணையை தீவிரமாக நடத்த தமிழ்நாடு போலீஸ் முடிவு செய்துள்ளது. இதற்காக அண்டை மாநிலங்களுக்கு செல்லவும் தமிழ்நாடு போலீஸ் தயாராகி வருகிறது.

சயான் வாக்குமூலம்
இந்த வழக்கில் குற்றவாளிகள் மற்றும் சாட்சியங்களில் ஒருவரான சயான் நேரடியாக எடப்பாடி பழனிசாமி மீதே குற்றஞ்சாட்டி இருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி சொல்லித்தான் கனகராஜ் இந்த திட்டங்களை தீட்டியதாக சயான் போலீசில் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. வாக்குமூலத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சயான் வாக்குமூலம் அளித்ததாக வெளியாகும் செய்திகள் எடப்பாடி பழனிசாமிக்கு பெரிய சிக்கலாக பார்க்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியை நோக்கி இவர் தனது கையை திருப்பி உள்ள நிலையில்தான் அண்டை மாநிலங்களுக்கு சென்று இந்த வாக்குமூலம் தொடர்பாக விசாரணை நடத்தவும் போலீஸ் திட்டமிட்டுள்ளது.

திட்டம் என்ன?
இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கிலும் விசாரணை நிறைவு பெற்றுள்ளது. ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அவரின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக மெதுவாக நடந்து வந்த விசாரணை தற்போது தீவிரம் அடைந்து.. ஒருவழியாக முடிந்துள்ளது. இந்த ஆணையம் தற்போது விசாரணையை முடித்துள்ள நிலையில் ஆகஸ்ட் 3-ல் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை
இந்த நிலையில் விசாரணை அறிக்கையை பொறுத்து ஆளும் திமுக தரப்பு வழக்குகளை போடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவில் யாருக்கு எல்லாம் இந்த அறிக்கையால் சிக்கல் வர போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விசாரணையில் சசிகலா, ஓபிஎஸ் ஆகியோர் ஏற்கனவே வாக்குமூலம் அளித்துள்ளனர். இதில் எடப்பாடிக்கு எதிராக புகார் எதுவும் இல்லை. அதனால் அவருக்கு பெரிதாக பிரச்சனை இருக்காது.

புகார் எல்லாம் இல்லை
இருப்பினும் விசாரணை அறிக்கை வெளியாகும் சமயத்தில் அதிமுகவில் சிலரின் தலைகள் உருளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா மரணத்தில் சில கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்காத நிலையில் இந்த அறிக்கை அந்த பதில்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எடப்பாடி ஒற்றை தலைமையை கைப்பற்றி அதிமுகவை வலுப்படுத்த நினைக்கும் நேரத்தில்.. திமுக அரசு இப்படி அதிமுகவிற்கு செக் வைக்கும் வகையில் செயல்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது!
-
எடப்பாடி பழனிசாமி ஆட்சியை நான்தான் காப்பாற்றிக் கொடுத்தேன்! எனக்கே சீட் இல்லை! தனபால் குமுறல் -
பிரச்சார வாகனத்தால் பறிபோன எம்.எல்.ஏ பதவி? - ஜெயலலிதாவுக்கு எதிராக பி.ஹெச்.பாண்டியன் செய்த சம்பவம்! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications