தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கை விஸ்வரூபம்- தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்- கொமமு முடிவு!
சென்னை: தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தப் போவதாக கொங்கு மக்கள் முன்னணி தலைமை ஒருங்கிணைப்பாளர் சி.ஆறுமுகம் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக கொங்கு மக்கள் முன்னணி தலைமை ஒருங்கிணைப்பாளர் சி.ஆறுமுகம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திட தனி ஆணையம் அமைத்து,மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திட வேண்டும். அதனடிப்படையில் தமிழகத்தில் ஒவ்வொரு சமூகத்திற்கும் இட ஒதுக்கீட்டின் அளவை தீர்மானிப்பதோடு, அனைத்து சமூகங்களுக்குமான வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தையும் சட்டப்பூர்வமாக நிலைபெற செய்ய முடியும்.

பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு: இந்தியாவில் முதன் முதலில் பீகார் மாநில அரசு சாதி வாரிமக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி முடித்து உள்ளது. இந்தியாவிலேயே சமூகநீதிக்கு முன் மாதிரி மாநிலமாக இருந்த வந்த தமிழ்நாடு இப்போது சமூக நீதிக்கான முன்னெடுப்பை மற்ற மாநிலங்கள் கையிலெடுத்த நிலையில் தமிழக அரசு காலம் தாழ்த்துவது சமூக நீதிக்கு எதிரானது.
பகிர்ந்தளிப்பதுதான் சமூக நீதி: ஆண்டாண்டு காலமாகப் பிற்படுத்தப்பட்டு, ஒடுக்கப்பட்ட தமிழ்ச்சமூகங்களுக்கான பிரதிநிதித்துவத்தையும், வாய்ப்பையும் அச்சமூகத்தையே அளவீடாகக் கொண்டு கல்வி, வேலைவாய்ப்புகளில் உறுதிபடுத்துவதே உண்மையான சமூக நீதியாகும். இத்தகைய இட ஒதுக்கீட்டுக்கு எத்தகைய சட்டச்சிக்கலும் ஏற்படாதிருக்க, சாதி வாரிக்கணக்கெடுப்பை உடனடியாக நடத்தி, சான்றுகளோடும், தரவுகளோடும் அதனை நிலைபெறச் செய்வதோடு, அனைத்து தமிழ்ச்சமூகங்களுக்குமான இடஒதுக்கீட்டை மக்கள் தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப விகிதாச்சார அடிப்படையில் பகிர்ந்தளிக்க வேண்டும்.
மாவட்டங்களில் போராட்டம்: சாதி வாரிக்கணக்கெடுப்பின் மூலம் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை நிலைநிறுத்த வேண்டும் என்பது தான் கொங்கு மக்கள் முன்னணியின் நிலைப்பாடு, அதைத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம். கடந்த தேர்தலில் திமுகவும் அதனை தேர்தல் வாக்குறுதியாக அளித்திருந்தது. ஆகவே, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தமிழக அரசு இதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து அவசியத்தை அரசுக்கு அறிய செய்ய கொங்கு மக்கள் முண்ணனி சார்பாக தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்து கொள்கிறோம்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications