எடப்பாடிக்கு அதிரி புதிரி ஷாக் கொடுத்த கோவை செல்வராஜ்.. சசிகலா அதிமுகவில்தான் உள்ளார்! அதிரடி பேட்டி
சென்னை: சசிகலா இன்னும் அதிமுகவில்தான் இருக்கிறார் என ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவை மாநகரின் ஓபிஎஸ் அணி அதிமுகவின் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கோவை செல்வராஜ் கூறுகையில், சசிகலா இன்னும் அதிமுகவில்தான் இருக்கிறார்.
அவர் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படவில்லை. வரும் 28 ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்னை வரும் பிரதமர் மோடியை சந்திப்பது குறித்து ஓபிஎஸ்தான் முடிவு எடுப்பார் என்றார்.

ஜெயலலிதா மறைவு
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்தன. இதையடுத்து இரட்டை இலை சின்னம் கிடைக்க இரு அணிகளும் ஒன்றிணைய முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஓபிஎஸ் ஒரு நிபந்தனையை முன் வைத்தார். அதாவது சசிகலாவையும் தினகரனையும் கட்சியிலிருந்து நீக்க வேண்டும். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என ஓபிஎஸ் கோரிக்கை வைத்தார்.

எடப்பாடி பழனிச்சாமி
இதை அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி ஏற்றார். இரு அணிகளும் இணைந்தன. இதையடுத்து அதிமுக பொதுக்குழு கூட்டி பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலா நீக்கப்பட்டார், அந்த பதவியும் நீக்கப்பட்டு புதிதாக ஒருங்கிணைப்பாளர்கள் பதவி உருவாக்கப்பட்டது.

பொதுச் செயலாளர்
பொதுச் செயலாளருக்கு இணையான இந்த பதவியில் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ்ஸும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிலையில் அதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கை எழுந்து கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி ஏகோபித்த ஆதரவுடன் தேர்வு செய்யப்பட்டார்.

ஒற்றைத் தலைமை
இந்த ஒற்றைத் தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்த ஓபிஎஸ் அவரது ஆதரவாளர்களை எடப்பாடி பழனிச்சாமி நீக்கினார். பதிலுக்கு எடப்பாடி பழனிச்சாமி, சிவி சண்முகம், கே பி முனுசாமி உள்ளிட்டோரை ஓபிஎஸ் அதிமுகவிலிருந்தே நீக்கினார். இப்படியாக தினந்தோறும் நீக்கும் படலங்கள் நடைபெற்று வருகின்றன.
Recommended Video

சசிகலா சிறையில்
அது போல் சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் அவர் அதிமுகவை கைப்பற்ற தேவையான நடவடிக்கைகளை எடுத்தார். ஆனால் சசிகலாவை அதிமுகவில் இணைக்க மாட்டோம் என எடப்பாடி உள்ளிட்டோர் உறுதியாக இருந்தன. ஆனால் ஓபிஎஸ் மட்டும் சசிகலாவுக்கு ஆதரவான கருத்தை தேவர் ஜெயந்தியிலும், ஆறுமுகசாமி ஆணைய விசாரணையிலும் முன் வைத்து அதிமுகவின் இரு அணிகளும் இணைய அவர் விதித்த நிபந்தனைகளை அவரே நீர்த்து போக செய்துவிட்டார் என்றே எடப்பாடி தரப்பு விமர்சனம் செய்தது.












Click it and Unblock the Notifications