சர்னு "இறங்கி" போயிருச்சு வெள்ளை பூண்டு.. சென்னை கோயம்பேட்டில் திடீர் மகிழ்ச்சி.. சூப்பர் சேஞ்ச்
சென்னை: ஒரு மகிழ்ச்சியான தகவல் கோயம்பேட்டிலிருந்து வெளியாகி உள்ளது.. இப்போதுதான் ஏழை, நடுத்தர மக்களுக்கு நிம்மதி கிடைத்துள்ளது.. என்ன காரணம்?
ஆசியாவிலேயே மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படுவது நம்முடைய கோயம்பேடு மார்க்கெட்டைதான்.. ஏனென்றால், இங்கு 1000-க்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக்கடைகள், 2000-க்கும் மேற்பட்ட சில்லறை கடைகள், 850 பழக்கடைகள் என பிரம்மாண்டமாக செயல்பட்டு வருகிறது.

காய்கறிகள்: அதேபோல, அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிராவிலிருந்து நாள்தோறும் 500-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் வந்து குவிவது தினசரி வாடிக்கையாகும். அதனால்தான், இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும் விற்பனை இங்கு ஜரூராக நடக்கும்.
தற்போது கோடை காலம் துவங்கியிருக்கும் சூழலில், காய்கறிகள், பழங்களின் வரத்துகள் அதிகமாக துவங்கியுள்ளன.. அதனால், இனிவரும் நாட்களில், நள்ளிரவு முதல் விடிகாலை வரை படுபஸியாக வாகன போக்குவரத்து நடமாட்டம் கோயம்பேட்டில் நிச்சயம் காணப்படும் என்றே தெரிகிறது.
பருவமழை: ஆனால், காய்கறிகளின் விலையை நினைத்தால்தான், நமக்கு ஒரு நிமிஷம் தூக்கி வாரிப்போடுகிறது.. தமிழகத்தில் ஜனவரி மாதம் வரை பருவமழை காரணமாக காய்கறி விலையானது உச்சத்தில் இருந்தது. அதன் பின் படிப்படியாக காய்கறி விலை குறைந்து வருகிறது.. அவ்வப்போது, சில காய்கறிகளின் விலைகள் மட்டும் திடீர் திடீரென உயர்ந்து கிலியை தந்துவிடுகின்றன.
அதிலும் பூண்டு விலை கிலோ 600 என்றெல்லாம் பயமுறுத்தியது.. இதற்கு பிறகு இஞ்சி விலையும் உயர்ந்தது.. எனினும், கடந்த ஜனவரி மாதம் வரை பருவமழை காரணமாக, காய்கறி விலையானது உச்சத்தில் இருந்த நிலையில், தற்போது கோடை காலம் தொடங்கியிருப்பதால், காய்கறி விலைகளும் குறைய தொடங்கி விட்டது.. இன்றைய காய்கறி நிலவரம் இதுதான்:
வெங்காயம்: வெங்காயம் ரூ.40, உருளைக்கிழங்கு ரூ.28, தக்காளி ரூ. 30, கேரட் ரூ. 65, முட்டைகோஸ் ரூ.16, கத்திரிக்காய் ரூ. 40க்கு விற்கப்படுகிறது.. சில நாட்கள் வரை மிரட்டிக்கொண்டிருந்த வெள்ளை பூண்டு, இப்போதுதான் ஒருவழியாக குறைந்துள்ளது.
மத்திய பிரதேசம், குஜராத், உத்தர பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவில் பூண்டு சாகுபடி செய்யப்படுவதுடன் விளைச்சலும் அதிகமாகி உள்ளதால், வரத்தும் கூடியிருக்கிறது.. எனவே, பூண்டு விலை கிலோ ரூ.150 ஆக குறைந்துள்ளது.. 600 ரூபாயிலிருந்து 15 நாட்களுககுள் 150 ரூபாய்க்கு பூண்டு விற்பது இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது..!
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications