கிருபானந்த வாரியாரின் கொள்ளுப்பேத்தி.. திருமணம் ஆன 3 மாதத்தில் மரணம்! மீண்டும் ஒரு வரதட்சணை புகார்
சென்னை: வரதட்சணை புகார்கள் தமிழகத்தை உலுக்கி வருகின்றன. தற்போது கிருபானந்த வாரியாரின் கொள்ளுப்பேத்தி கவிதா திருமணம் ஆன 3 மாதத்தில் உயிரிழந்துள்ளார். எனது மகள் சாவுக்கு வரதட்சணை கொடுமை தான் என்றும், 100 பவுனுக்கு மேல் நகை போட்டு திருமணம் செய்து கொடுத்ததாகவும், மாப்பிள்ளைக்கு 13 பவுன் நகை பொட்டதாகவும் வேதனையுடன் கவிதாவின் தந்தை கூறியுள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் வசித்து வருபவர் தட்சினாமூர்த்தி. இவரது மகள் கவிதா. சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இவர் பிரபலமான ஆன்மீக சொற்பொழிவாளரான கிருபாணந்த் வாரியாரின் கொள்ளுப்பேத்தி ஆவார்.

ஜபல்பூர் சென்றுள்ளனர்
கவிதாவுக்கும் திண்டுக்கல்லை சேர்ந்த நாகார்ஜுன் என்பவருக்கும் கடந்த மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. நாகார்ஜூன் ராணுவத்தில் டாக்டராக பணியாற்றி வந்துள்ளார். கல்யாணம் முடிந்த பிறகும் தனது மனைவியான கவிதாவை உடன் அழைத்து செல்லாமல் சென்னையில் விட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், கடந்த மாதம் 10 ஆம் தேதி ஜபல்பூர்க்கு கவிதாவும் அவரது கணவர் நாகார்ஜூனும் சென்றுள்ளனர்.
திடீரென உயிரிழந்த கவிதா
அப்போது திடீரென நள்ளிரவு 12.30 மணிக்கு கவிதாவின் தந்தையை தொடர்பு கொண்ட நாகார்ஜுனா குடும்பத்தினர், உங்கள் மகளுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மூளைக்கு செல்லும் நரம்புகள் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடுகிறார் என்று தெரிவித்து இருக்கிறார்கள். இதனால் பதறிப்போன கவிதாவின் பெற்றோர்கள் விமானம் மூலம் ஜபல்பூர் ராணுவ மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அப்போது, கவிதா உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.
ஜூன் 11 ஆம் தேதி அங்குள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரதேச பரிசோதனைக்காக உடல் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. பிரதே பரிசோதனை முடிந்ததும், கவிதாவின் உடலை சென்னைக்கு கொண்டுவர மாப்பிள்ளை வீட்டினர் ஏற்பாடு செய்துள்ளனர். கவிதாவின் பெற்றோரை கேக்காமலே இதை செய்து இருக்கிறார்கள்.
இடம் வாங்கி தர சொல்லி துன்புறுத்தல்
கவிதாவின் உடல் சென்னைக்கு கொண்டு வந்து நல்லடக்கம் செய்யப்பட்டது. பின்னர் ஒரு வார காலத்திற்கு சென்னையில் உள்ள கவிதாவின் வீட்டிலேயே நாகாராஜுனா, அவரது தந்தை - தாய் தங்கியிருந்துள்ளனர். இதற்கிடையே, மாப்பிள்ளை நாகார்ஜுனாவின் நடத்தையில் கவிதாவின் குடும்பத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஜபல்பூர் கோயம்பேடு காவல் நிலையத்தில் கவிதாவின் தந்தை புகாரளித்துள்ளார்.
மருத்துவமனை கட்ட இடம் வாங்கி தர சொல்லி கவிதாவை மாப்பிள்ளை வீட்டினர் துன்புறுத்தியதாகவும், மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் மாப்பிள்ளை வீட்டினர் கொடுத்த கொடுமையில் கவிதா மரணம் அடைந்து இருப்பதாக சந்தேகம் தெரிவித்த கவிதாவின் தந்தை இது தொடர்பான ஆவணங்களையும் கொடுத்து இருக்கிறார்.
தலையில் முன், பின்புறம் காயம்
ராணுவ மருத்துவமனையில் கொடுத்த இறப்பு சான்றிதழில் தலையில் அடிபடவில்லை என்று தெரிவித்து இருந்ததாகவும், அரசு மருத்துவமனை உடற்கூறாய்வு அறிக்கையில் தலையின் முன் பக்கத்திலும் பின் பக்கத்திலும் பலமாக அடிபட்டுள்ளதாக கூறப்படுகிறது என்று தெரிவித்து இருக்கிறார்.
அன்று மொழி புரியாததால் மகளின் உடலை வாங்கி வந்துவிட்டதாகவும் வரதட்சணை கொடுமையால் தனது மகளை கொலை செய்த நாகார்ஜூனா குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் புகாரளித்தாகவும் தற்போது வரை புகாரை வாங்க மறுப்பதாகவும் வேதனையுடன் கூறினார். இது தொடர்பாக சென்னையில் பேட்டி அளித்த கவிதாவின் தந்தை கூறியதாவது:-
வரதட்சணை கொடுமைதான் காரணம்
100 பவுனுக்கு மேல் நகை போட்டு திருமணம் செய்து கொடுத்ததாகவும், மாப்பிள்ளைக்கு 13 பவுன் நகை பொட்டதாகவும் வேதனையுடன் கூறிய கவிதாவின் தந்தை கூறியுள்ளார். 100 பவுனுக்கும் மேலே நகை போட்டேன். என் மகளுக்காக ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் இந்த மூன்று மாதத்தில் என் மகளிடம் இருந்து 3 லட்சம் ரூபாய் வரை வாங்கியுள்ளார். ஏற்கனவே நிச்சயதார்த்தம் ஆகி நாகர்ஜுனாவிற்கு நின்றுள்ளது.
சென்னையில் ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நின்றுள்ளது. எனது மகள் மரணத்திற்கு வரதட்சணை கொடுமைதான் காரணம். என் பெண்ணிற்கு நீதி வேண்டும். காவல் நிலையம் உள்ளே விட மாட்டேங்கிறார்கள். நான் இரண்டு மணி நேரமாக இங்கே நிற்கிறேன்" என்று வேதனையுடன் பேட்டி அளித்துள்ளார்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications