எங்களுக்கா ஓட்டு இல்லை? நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 9 இடங்களில் டெபாசிட் இழந்ததே! கிருஷ்ணசாமி பதிலடி
சென்னை: கன்னியாகுமரி நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 4 சதவீதம் வாக்குகளையே பெற்றது, 9 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்தார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. முதலில் அதிமுக கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லப்பட்டது. ஆனால் அதிமுகவில் தங்களுக்கு மதிப்பு கொடுக்கவில்லை. அதிமுக எங்களை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: புதிய தமிழகம் கட்சியுடன் நாங்கள் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை. வேறு ஒருவர் மூலமாக முதலில் 10 தொகுதிகளை கேட்டனர். முடியாது என்றோம். பின்னர் 5 தொகுதிகளை குறைத்துக் கொண்டு 5 தொகுதிகளை கேட்டனர். அதற்கும் தர முடியாது என நாங்கள் சொல்லிவிட்டோம்.
கடந்த 2021 ஆம் ஆண்டு எங்களுடன் அவர் கூட்டணி வைக்கவில்லை. இதை சொல்லக் கூடாது, ஆனால் அவர் சொல்ல வைத்துவிட்டார். ஒவ்வொரு கட்சியும் கூட்டணியில் சேரும் போது அந்த கட்சி பெற்ற வாக்குகளின் அடிப்படையில்தான் சீட் கொடுப்பது வழக்கம். 31 தொகுதிகளில் போட்டியிட்டு 33 ஆயிரம் வாக்குகள் பெற்ற கிருஷ்ணசாமிக்கு எத்தனை தொகுதிகள் கொடுக்க முடியும்?
அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் எல்லாருமே இப்படித்தான் விதிகளை கடைபிடித்து வருகிறார்கள். எங்களுடன் கிருஷ்ணசாமி நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அவருக்குத் தேவையானவரை அனுப்பியிருந்தார். நாங்கள் இயலாது என சொல்லிவிட்டோம். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்றைய தினம் 43 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்திருந்தார். அதில் ஸ்ரீவில்லிபுத்தூர், நெல்லை ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். டாக்டர் கிருஷ்ணசாமி ஒட்டபிடாரத்தில் போட்டியிடுகிறார்.
இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு அவர் பதில் அளித்தார். அவர் கூறுகையில், எடப்பாடி பழனிசாமியுடன் இரு முறை பேச்சுவார்த்தை நடத்தினேன்.
எங்களுடன் ஏன் கூட்டணி அமைக்கவில்லை என்பது பழனிசாமிக்குத்தான் தெரியும். நாங்கள் குறைந்த வாக்குகளை பெற்றதாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறாரே, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரியில் 4 சதவீதம் வாக்குகளையும் அதிமுகவின் கோட்டை என சொல்லப்படும் நெல்லையில் 8.4 சதவீதம் வாக்குகளையும் பெற்றது.
அது போல் தேனியில 13.6 சதவீதமும் ராமநாதபுரத்தில் 9.2 சதவீத வாக்குகளையும் பெற்றது. தென்காசியில் புதிய தமிழகம் 22.1 சதவீதம் வாக்குகளை பெற்றது. விருதுநகர் தொகுதியில் தேமுதிக 35.8 சதவீதம் வாக்குகளை பெற்றது.
திண்டுக்கல் தொகுதியில் அதிமுக கூட்டணியில் இருந்த எஸ்டிபிஐ கட்சி 11.1 சதவீதம் வாக்குகளை பெற்றது. இந்த புள்ளி விவரங்களில் இருந்தே நாங்கள் பெற்ற வாக்குகள் அனைவருக்கும் தெரியும். 9 தொகுதிகளில் அதிமுக டெபாசிட் இழந்துள்ளது.
தென்காசி நாடாளுமன்றத் தொகுதிக்குள்பட்ட 3 சட்டசபை தொகுதிகளில் ஒன்றை கேட்டேன். எங்களால் இந்த முறை அதிகமாரக பாதிக்கப்டபோவது அதிமுகதான். அக்கட்சியால் ஆட்சியை பிடிக்க முடியாது. தேர்தல் ஆணையத்தை அணுகி தனி சின்னத்தை பெறுவோம் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
-
"எங்க ஏரியாவுக்கு வா"! சுந்தர் சி முன்பே "ஸ்டைல் பாண்டி" டயலாக் சொன்ன எடப்பாடி! குலுங்கிய மதுரை! -
ஜெயலலிதா இருந்தவரை வாலை சுருட்டி இருந்தாங்க.. நான் இருந்திருந்தால்.. கண் சிவந்த சசிகலா -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு












Click it and Unblock the Notifications