கிரண் பேடி.. எனக்கு ஒரு டவுட்டு.. குஷ்பு கேட்ட பொளேர் கேள்வி!
சென்னை: ஒரு டிவீட் போட்டாலும் போட்டார்.. சரமாரியாக கேலி கிண்டல்களை வாரிக் கொட்டிக் கொண்டுள்ளார் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி.
சூரியனிலிருந்து வரும் சத்தம், ஓம் என்று ஒலிக்கிறது என்று யாரோ ஒருவர் கிளப்பி விட அதை உண்மை என்று நம்பி (நம்பிக்கை இல்லாதவர்கள் இதுபோன்ற பித்தலாட்டத்தை புரமோட் செய்ய மாட்டார்கள் என்பதால், கிரண் பேடி இதை நம்பி விட்டார் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது) அதை தனது டிவிட்டரில் போட்டுள்ளார் கிரண் பேடி.
இதுதான் இப்போது பெரும் சர்ச்சையாகியுள்ளது. படித்த பெண், இந்தியாவில் லட்சக்கணக்கானோருக்கு ரோல் மாடலாக இருப்பவர், இப்படி மத சாயம் பூசிக் கொள்ளலாமா என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கேலி கிண்டல்களால் துளைத்தெடுத்து வருகின்றனர்.
Mam with all due respect, I have a doubt. Do all BJP leaders take an oath to keep their brains and commonsense safely tucked away before joining the party?? 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔 https://t.co/USkZOlL4W1
— KhushbuSundar ❤️ (@khushsundar) January 4, 2020
இந்த நிலையில் நடிகை குஷ்புவும் ஒரு டிவீட் போட்டு கேள்வி கேட்டுள்ளார். அதில், மேடம் ரொம்ப ரொம்ப மரியாதையுடன் உங்களிடம் ஒரு சந்தேகத்தை விளக்கிக் கொள்ள கேட்கிறேன். அனைத்து பாஜக தலைவர்களுமே கட்சியில் சேருவதற்கு முன்பு தங்களது மூளையை கழற்றி பாதுகாப்பாக வைத்து விடுவார்களா.. என்று கேட்டுள்ளார் குஷ்பு.
என்னாது.. சூரியன் ஓம் ஓம்னு முழங்குதா.. கிரண் பேடி போட்ட டிவீட்.. நெட்டிசன்கள் கலாய்!
இந்த டிவீட்டும் இப்போது வைரலாகி வருகிறது. போட்ட டிவீட்டை இன்னும் கிரண் பேடியும் எடுக்கவில்லை. கேலி கிண்டல்களுக்கும் ஓய்வில்லை!