என்னா நடிப்பு?.. ஆஸ்கருக்கு போட்டியிடலாம்.. ஈஸியா ஜெய்ப்பீங்க!.. மோடியின் முடிவு குறித்து குஷ்பு
சென்னை: சமூகவலைதளங்களை விட்டு வெளியேற முடிவு செய்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி போட்டுள்ள ட்வீட்டிற்கு குஷ்பு பதிலடி கொடுத்துள்ளார்.
ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதிக பாலோயர்களை கொண்ட உலகத் தலைவர்களில் முன்னணியில் இருப்பவர் மோடிதான். அது போல் சமூகவலைதளங்களை அதிகமாக பயன்படுத்தும் அரசியல்வாதிகளில் முக்கியமானவரும் அவரே. அவரது ட்விட்டர் கணக்கை 5.33 கோடி பேர் பின் தொடர்கிறார்கள்.

அதிரடி ட்வீட்
அது போல் பேஸ்புக்கில் 4.4 கோடி பேரும், இன்ஸ்டாகிராமில் 3.52 கோடி பேரும் மோடியை பின் தொடர்கிறார்கள். அது போல் அவரது யூடியூப் பக்கத்தை 45 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகிறார்கள். இதன் மூலம் கடந்த 2014-ஆம் ஆண்டு தேர்தலில் மக்கள் ஆதரவை மோடி திரட்டினார். இந்த நிலையில் நேற்றிரவு அதிரடியாக அவர் ஒரு ட்வீட் போட்டுள்ளார்.
|
போஸ்ட்
அதில் அவர் கூறுகையில் இந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூட்யூப் ஆகிய சமூக வலைதள கணக்குகளை விட்டுவிடலாம் என்று யோசிக்கிறேன். உங்கள் அனைவரையும் போஸ்ட் செய்ய வைப்பேன் என தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள ராகுல் காந்தி சமூக வலைதளங்களிலிருந்து வெளியேறுவதற்கு பதிலாக வெறுப்பைக் கைவிடுங்கள் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஆஸ்கர் விருது
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு, பிரதமர் மோடியின் ட்வீட்டுக்கு பதில் அளித்துள்ளார். அவர் கூறுகையில், ஆஹா மோடி நடிப்பில் நெஞ்சை தொட்டுவிட்டார். அவர் ஆஸ்கர் விருதுக்கு போட்டியிடலாம். அப்படி போட்டியிட்டால் எந்த வித முயற்சியும் இன்றி எளிதாக அவர் வெற்றி பெறுவார். நான் சொல்வதை நம்புங்கள் என தெரிவித்துள்ளார். இவரது கருத்துக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து பதிலளித்துள்ளனர்.
|
நீங்க இருக்கீங்க
உங்களை போன்ற நடிகர்கள் எல்லாம் இருக்கும் போது எங்களால் ஆஸ்கரை பெற முடியாது என்கிறார் இந்த வலைஞர்.
|
ராகுலுக்கு வருடத்துக்கு ஒரு ஆஸ்கர்
உங்க கட்சி தலைவன் பப்பு க்கு வருசத்துக்கு ஒரு ஆஸ்கர் தரலாம் அந்தளவுக்கு நடிச்சி நாட்டு மக்கள ஏமாத்தறார். சுமார் ஒரு அறுபது வருசமா நாட்டு மக்கள ஏமாத்திட்டு இப்போ மோடிய நடிகன்ங்கற உங்களுக்கெல்லாம் மோடியை பற்றி பேச தகுதி இல்லை என்கிறார் இந்த நெட்டிசன்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications