நில ஆவணம்.. அதைவிடுங்க, நிலத்தரகர்கள் சரவெடி.. 3ம் தேதி விஷயம் இருக்கு.. கோட்டைக்கு பறந்த கோரிக்கை
சென்னை: கூலி தொழிலாளர்கள் தொழிலை, அமைப்புசாரா பட்டியலில் இணைத்திட இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
கூலி நிலத்தரகர்கள் தொழிலுக்கு அங்கீகாரம் கேட்டு பல காலமாகவே கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது.. அடித்தட்டு மக்கள் முதல் மேல் தட்டு மக்கள் வரை சொந்தமாக நிலம் வாங்குவதற்கும், விற்பதற்கும் பாலமாக இருந்து செயல்படுபவர்கள் நிலத்தரகர்கள்.

அரசு அங்கீகாரம்: கூலி நிலத்தரகர் தொழிலாளர்கள் அவர்களுக்கு கமிஷன் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. ரியல் எஸ்டேட் தொழிலாளர்களால் அரசுக்கும் வருமானம் வருகிறது. வேறு தொழிலாளர்கள் அமைப்பிற்கு அரசு அங்கீகாரம் கொடுத்து உள்ளது. அதுபோல் ரியல் எஸ்டேட் தொழிலுக்கு அங்கீகாரம் கொடுத்து அமைப்பு சாரா பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று, தமிழக அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர் சங்கத்தின் 20-ம் ஆண்டு விழா திருப்பூரில் நாளை மறுநாள் நடக்கிறது. இதையொட்டி சங்கத்தின் அகில இந்திய தலைவர் வி.என்.கண்ணன் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
அறிக்கை: அந்த அறிக்கையில் சொல்லி உள்ளதாவது: நிலத்தரகர் தொழில் செய்யும் தொழிலாளர்கள் நலன் காக்க அவர்கள் பெற வேண்டிய நிலத்தரகர் கமிஷன் தொகையை சுமூகமாக பெற்றிட கடந்த 24.10.2004 அன்று தமிழ் திருநாடு நிலம், வீடு மனை தரகர்கள் நலச்சங்கம் என்ற பெயரில் சென்னை விருகம்பாக்கத்தில் உருவாக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் பாலமாக இருந்து நிலத்தரகு தொழிலாளர்கள் செயல்படுகிறார்கள்.
எல்லா தொழிலுக்கும் வேலை முடித்தால் உடனே ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனல் நிலத்தரகு தொழில் செய்யும் கூலி நிலத்தரகர்களுக்கு எப்பொழுது ஊதியம் வரும் என்ற நிலையான கால அவகாசமே இல்லை.
ஆண்டு விழா: ஆண்டுதோறும் சங்கத்தின் ஆண்டு விழா மற்றும் மாநாடு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. எங்களது ஒரே நோக்கம் கூலி தொழிலாளர்கள் தொழிலை அமைப்புசாரா பட்டியலில் இணைத்திட வலியுறுத்தி கொண்டிருக்கிறோம்.
வருகிற 3-12-2023 அன்று திருப்பூரில் நமது சங்கத்தின் சார்பாக 20-ம் ஆண்டு விழா நடைபெற உள்ளது. இதில் அமைச்சர் பெருமக்கள் பல அரசியல் தலைவர்கள் பல சங்கத்தின் தோழர்கள், தொழில் அதிபர்கள் கலந்து கொள்கிறார்கள். ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் தொழிலாளர்கள் கூலி நிலத்தரகர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications