Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நில வழிகாட்டி மதிப்பு..சொத்து வரி ரசீது + மின்கட்டண ரசீது.. தமிழக அரசின் பதிவுத்துறை முக்கிய உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நில வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் தொடர்பாக, தமிழக அரசின் பதிவுத் துறை புதிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது.. என்ன அது?

வழிகாட்டி மதிப்பு என்பது நிலவிவகாரங்களில் மோசடிகளை தடுக்கவும், அந்த மோசடிகளை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.. அதேபோல, பதிவுக் கட்டணம் செலுத்துவதை தவிர்க்க முயல்பவர்களையும் கண்டுபிடிக்க உதவுகிறது.. இதனால், நிலம் தொடர்பான பரிவர்த்தனைகளில் நடக்கும் ஊழல் மற்றும் மோசடிகளை எளிதாக தடுக்க முடியும்..

Land Guideline value and Big Announcement by TN Registration Department

அமைச்சர் மூர்த்தி: இந்த வழிகாட்டி மதிப்பு மற்றும் அடுக்குமாடி திட்டங்களில் வீடு விற்பனை பதிவுக்கான நடைமுறையில் புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்த போவதாக தமிழக அமைச்சர் மூர்த்தி சமீபத்தில் கூறியிருந்தார். அதாவது, சென்னை, கோவை நகரங்களில், 10 சதவீதம் வரையும், பிற நகரங்களில், 3, 5, 7 சதவீதங்களில் வழிகாட்டி மதிப்பை உயர்த்த ஆராய்ந்து வருவதாக கூறியிருந்தார்.

இதற்கு பிறகு, பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டிருந்த அறிவிப்பில், அனைத்து தெரு மற்றும் சர்வே எண்களுக்கும், வழிகாட்டி மதிப்பு மாற்றி அமைக்கப்படவில்லை, குறைந்தபட்ச மதிப்பை விட குறைவாக உள்ள தெரு மற்றும் சர்வே எண்களுக்கு மட்டுமே மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.. தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்புகள், tnreginet.gov.in என்ற பதிவுத் துறை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன என்று தெளிவுபடுத்தியிருந்தார்.

பத்திரங்கள்: பொதுவாக, நிலங்களுக்கு சர்வே எண் வாரியாக, வழிகாட்டி மதிப்பு என்பது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்புகள் அடிப்படையில்தான் பத்திரங்கள் பதிவுக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.

ஆனால் தற்போது, குடியிருப்பு, விவசாய நிலங்களுக்கான குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்புகளே இருப்பது தெரியவந்துள்ளது. இவற்றின் ஓனர்களும், குடியிருப்புக்கான மதிப்பிலேயே சொத்துக்களை விற்பதால், அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது. எனவேதான், மண்டல அலுவலகங்களுக்கு, பதிவுத்துறை தற்போது முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது. அதில் உள்ளதாவது:

"பெரும்பாலான இடங்களில் நகர சாலைகள், தெருக்களில் வணிக ரீதியிலான செயல்பாடுகள் அதிகரித்துள்ளன. ஆனால், வழிகாட்டி மதிப்புக்கான பட்டியலில், இந்த பகுதிகள் குடியிருப்பாகவே தொடர்கின்றன. அதனால், ஒவ்வொரு மண்டலத்திலும், வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவரும், 10 ஆவணங்களில், சம்பந்தப்பட்ட கட்டிடங்களின் சொத்து வரி ரசீது, மின் கட்டண ரசீதுகளை ஆய்வு செய்ய வேண்டும்.

இதில், வணிக பயன்பாடு என குறிப்பிடப்பட்டிருந்தால், வழிகாட்டி மதிப்பு வகைபாட்டை மாற்ற, பரிந்துரை செய்ய வேண்டும். மண்டலம் வாரியாக, இது தொடர்பான விபரங்களை பட்டியலாக தயாரித்து, 5 நாட்களுக்குள் தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.. சொத்து வரி, மின் கட்டண ரசீது அடிப்படையில் ஆய்வு செய்து, வழிகாட்டி மதிப்புகளை மாற்றுவதற்கான பணிகளை, பதிவுத்துறை கையில் எடுத்துள்ளது, மக்களின் கவனத்தை பெற்று வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+