யாருக்கோ ஏஜெண்ட்டாக இருக்கிறார்.. மதுரை ஆதீனம் மீது சட்ட நடவடிக்கை பாயும்.. சீறும் டிடிவி தினகரன்
Recommended Video

சென்னை: அவதூறு பரப்பினால் மதுரை ஆதீனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவுடன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இணையப்போகிறது என்று மதுரை ஆதீனம் சமீபத்தில் கூறியிருந்தார். இதை உடனடியாக டிடிவி தினகரன் மறுத்து ட்விட்டரில் தகவல் வெளியிட்டிருந்தார்.

ஆனால், இன்று மீண்டும் மதுரை ஆதீனம் அளித்த பேட்டியில், தினகரன் மறுத்தாலும், இணைப்பு நடக்கப்போவது உண்மைதான் என்றார்.
இதனால் கோபமடைந்துள்ளார் டிடிவி தினகரன்.. அவர் கூறுகையில், அதிமுகவுடன் அமமுகவை இணைக்க எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. தொடர்ந்து பொய் தகவலை பரப்பினால் மதுரை ஆதீனம் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ச்சியாக, அதிமுக-அமமுக கட்சிகள் இணைப்பு பற்றி பொய் தகவலை மதுரை ஆதீனம் பரப்பி வருவதை பார்த்தால், அவர் யாருக்கோ ஏஜெண்ட்டாக இருக்கிறார் என்பது தெரிகிறது.
இணைப்பு பேச்சுவார்த்தை உண்மை என்றால் அதை செய்வது யார் என்பதை வெளிப்படையாக சொல்லலாமே.. யாருக்கோ உதவுவதற்காக பொய் செய்திகளை தொடர்ந்து பரப்பினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications