இலக்கிய உலகத்துக்கு பேரிழப்பு.. ஈரோடு தமிழன்பன் காலமானார்! முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
சென்னை: தமிழ் இலக்கிய உலகில் மிகப்பெரும் தடத்தை பதித்த கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமான நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். . "வணக்கம் வள்ளுவ" என்ற இவரது கவிதைத் தொகுப்பு சாகித்ய அகாடமி விருதை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் சிறுகவிதை, ஹைக்கூ, மரபுக்கவிதை உள்ளிட்ட பல துறைகளில் தனது தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியர் கவிஞர் ஈரோடு தமிழன்பன். 1933 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் பிறந்த தமிழன்பனின் இயற்பெயர் ஜெகதீசன்.
தமிழ்ப்பண்பாட்டின் ஆழமான வேர் பிடித்த பிள்ளையாக இலக்கிய உலகில் உயர்ந்த நிலையை அடைந்த இவர், மரபுக்கவிதையும் புதுக்கவிதையும் ஒரே நேரத்தில் கையாண்ட கவிஞர்களில் ஒருவர். "வணக்கம் வள்ளுவ" எனும் கவிதைத் தொகுப்பு 2004 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதைப் பெற்றது.

தமிழில் ஹைக்கூ கவிதைக்கு பொதுவெளியில் தனிச்சிறப்பு கிடைக்க காரணமானவர்களில் முதன்மையானவர் இவர் என இலக்கிய வரலாறு குறிப்பிடுகிறது. பாரதிதாசன் மரபை தொடர்ந்த கவிஞராக, வானம்பாடி கவிதை இயக்கத்திலும் ஈரோடு தமிழன்பன் முக்கிய பங்கு வகித்தார். அவரது படைப்புகள் பெரும்பாலும் ஓர் அமைதியான சிந்தனையை, சமூகநேர்மையை, மனிதநேயத்தை மையப்படுத்தி வந்தன.
கவிதையைத் தாண்டியும் பல துறைகளில் அவர் தன் தடத்தை பதித்தவர். தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய அனுபவம், அவரின் பேச்சுத் திறனுக்கும் மொழிப்புலமைக்கும் சான்று. தமிழ்நாடு அரசின் அறிவியல் தமிழ் மன்றத்தில் உறுப்பினராகவும், "அரிமா நோக்கு" என்ற ஆய்விதழின் ஆசிரியராகவும் இவர் பணியாற்றினார். தமிழ் இலக்கியத்துக்காக மட்டுமல்ல, அறிவியல் மற்றும் பொது அறிவு சார்ந்த துறைகளிலும் தமிழ் மொழியைப் பரப்ப முயன்றவர் தமிழன்பன்.
தமிழ்ப்படத்துறையிலும் ஆழமாக தடம் பதித்தவர். இயக்குநர், பாடலாசிரியர், வசனகர்த்தா என திரைப்படத் துறையிலும் பல்வேறு விதங்களில் பங்களித்தார். தமிழ் மொழிக்காக இடைவிடாத உழைப்பு செய்த இவர், 60 க்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகள், ஆறு பெரும் தொகுதிகளையும் வெளியிட்டுள்ளார். அவரின் படைப்புகள் இன்றும் வாசகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்று வருகின்றன. இந்நிலையில், மூச்சுத்திணறல் காரணமாக சில நாட்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று அதிகாலை காலமானார்.
இந்நிலையில், அவரின் மறைவுச் செய்தி வெளியாகியதும், இலக்கியவாதிகள், அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.எம்.வி. பிரபாகரராஜா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற செயலாளர் விஜயா தாயன்பன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
-
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது?












Click it and Unblock the Notifications