Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலக்கிய உலகத்துக்கு பேரிழப்பு.. ஈரோடு தமிழன்பன் காலமானார்! முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் இலக்கிய உலகில் மிகப்பெரும் தடத்தை பதித்த கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமான நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். . "வணக்கம் வள்ளுவ" என்ற இவரது கவிதைத் தொகுப்பு சாகித்ய அகாடமி விருதை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் சிறுகவிதை, ஹைக்கூ, மரபுக்கவிதை உள்ளிட்ட பல துறைகளில் தனது தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியர் கவிஞர் ஈரோடு தமிழன்பன். 1933 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் பிறந்த தமிழன்பனின் இயற்பெயர் ஜெகதீசன்.

தமிழ்ப்பண்பாட்டின் ஆழமான வேர் பிடித்த பிள்ளையாக இலக்கிய உலகில் உயர்ந்த நிலையை அடைந்த இவர், மரபுக்கவிதையும் புதுக்கவிதையும் ஒரே நேரத்தில் கையாண்ட கவிஞர்களில் ஒருவர். "வணக்கம் வள்ளுவ" எனும் கவிதைத் தொகுப்பு 2004 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதைப் பெற்றது.

Legendary Tamil Poet Erode Thamizhanban Passes Away CM Stalin Pays Homage

தமிழில் ஹைக்கூ கவிதைக்கு பொதுவெளியில் தனிச்சிறப்பு கிடைக்க காரணமானவர்களில் முதன்மையானவர் இவர் என இலக்கிய வரலாறு குறிப்பிடுகிறது. பாரதிதாசன் மரபை தொடர்ந்த கவிஞராக, வானம்பாடி கவிதை இயக்கத்திலும் ஈரோடு தமிழன்பன் முக்கிய பங்கு வகித்தார். அவரது படைப்புகள் பெரும்பாலும் ஓர் அமைதியான சிந்தனையை, சமூகநேர்மையை, மனிதநேயத்தை மையப்படுத்தி வந்தன.

கவிதையைத் தாண்டியும் பல துறைகளில் அவர் தன் தடத்தை பதித்தவர். தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய அனுபவம், அவரின் பேச்சுத் திறனுக்கும் மொழிப்புலமைக்கும் சான்று. தமிழ்நாடு அரசின் அறிவியல் தமிழ் மன்றத்தில் உறுப்பினராகவும், "அரிமா நோக்கு" என்ற ஆய்விதழின் ஆசிரியராகவும் இவர் பணியாற்றினார். தமிழ் இலக்கியத்துக்காக மட்டுமல்ல, அறிவியல் மற்றும் பொது அறிவு சார்ந்த துறைகளிலும் தமிழ் மொழியைப் பரப்ப முயன்றவர் தமிழன்பன்.

தமிழ்ப்படத்துறையிலும் ஆழமாக தடம் பதித்தவர். இயக்குநர், பாடலாசிரியர், வசனகர்த்தா என திரைப்படத் துறையிலும் பல்வேறு விதங்களில் பங்களித்தார். தமிழ் மொழிக்காக இடைவிடாத உழைப்பு செய்த இவர், 60 க்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகள், ஆறு பெரும் தொகுதிகளையும் வெளியிட்டுள்ளார். அவரின் படைப்புகள் இன்றும் வாசகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்று வருகின்றன. இந்நிலையில், மூச்சுத்திணறல் காரணமாக சில நாட்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று அதிகாலை காலமானார்.

இந்நிலையில், அவரின் மறைவுச் செய்தி வெளியாகியதும், இலக்கியவாதிகள், அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.எம்.வி. பிரபாகரராஜா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற செயலாளர் விஜயா தாயன்பன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+