இன்று கொடி நாள்.. படை வீரர்களின் நலனை காப்போம்.. பங்களிப்போம்
நாட்டின் உண்மையான கதாநாயகர்களான பாதுகாப்பு படை வீரர்களின் தியாகங்களை இந்த கொடி நாளில் அனைவரும் போற்றி வருகின்றனர்.
சென்னை: நாட்டின் உண்மையான கதாநாயகர்களான பாதுகாப்பு படை வீரர்களின் தியாகங்களை இந்த கொடி நாளில் அனைவரும் போற்றி வருகின்றனர். அதே நேரத்தில், அவர்களது குடும்பத்தினருக்கு உதவும் வகையில் இந்த நாளில் நேரடியாக தங்களது பங்களிப்பை செலுத்தி வருகின்றனர்.
தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்கிய பலர் டிவிட்டரில் பகிர்ந்து வருவதோடு, விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர். நம் நாட்டினை இரவு பகலாகக் காத்து வரும் முப்படை வீரர்களின் தியாகங்களைப் போற்றும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7- ம் தேதி படை வீரர் கொடி நாளாக கொண்டாடப்படுகிறது. 1949 ஆம் ஆண்டில் இருந்து இந்த படை வீரர் கொடி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

வெயில், பனி, மழை என பாராமல் எல்லைகளையும், நீண்ட நெடிய கடல் பகுதிகளையும், அதி நவீன தொழில்நுட்பத்துடன் வானுலக பரப்பை தங்கள் வசம் வைத்திருக்கும் முப்படை வீரர்களின் குடும்ப நலன்களை பேணிக் காப்பது நமது சமூகக் கடமையாகும்.
கொடிநாளில் விற்கப்படும் கொடி காசு மூலமும், நன்கொடை மூலமும் திரட்டப்படும் நிதி உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காகவும், முன்னாள் படை வீரர்களின் மேம்பாட்டிற்காகவும் செலவிடப்படுகிறது. பள்ளிகளில் மாணவர்கள் பெரும் பங்களிப்பை அளித்து வருகின்றனர்.
.@nsitharaman இன்று கொடி நாள்.. படை வீரர்களின் நலனை காப்போம்.. பங்களிப்போம் #FlagDay #ArmedForcesFlagDay @adgpi #contribute pic.twitter.com/dTIm6AeG9T
— Oneindia Tamil (@thatsTamil) December 7, 2018
இந்தநிலையில், நாட்டிற்காக உயிர் துறந்த பலரையும் நினைவுகூர்ந்து, இந்த நாளில் பலர் தங்களது வீரவணக்கத்தை சமூக வலைதளங்களில் செலுத்துவதோடு, பெருமையை உலகறிய செய்து வருகின்றனர். அந்த வகையில், பங்களிப்பை செலுத்த விரும்புபவர்கள் (Paytm- 8800462175 அல்லது ksb.gov.in ) என்ற வங்கி கணக்கிலும், இணைய வாயிலாகவும் செலுத்தலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கோடி, கோடியாக கொட்டிக் கொடுத்தாலும் நாட்டிற்காக உயிர்தியாகம் செய்த படை வீரர்களின் துணிச்சல்பணிக்கு ஈடாகாது என்பதே நிதர்சனம்.
-
மகாபலிபுரம் டூ எண்ணூர்.. இந்தியாவின் மிக முக்கிய ரோடு.. மின்னல் வேகத்தில் தயார் ஆகும் 10 வழிச் சாலை -
மண்டைக்கேறிய போதை.. ரம்யாவின் படுக்கையறையில் புகுந்த சென்னை போலீஸ்காரர்.. மறு நொடியே பிக் ட்விஸ்ட் -
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கு நிபந்தனைகள் தளர்வு! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
சென்னை மக்களே 'கரண்ட் பில்' இன்னும் கட்டவில்லையா.. மின்சார வாரியம் மிக முக்கிய அறிவிப்பு -
மாற்றி யோசித்த சென்னை குடிநீர் வாரியம்.. வேஸ்ட் தண்ணீரில் 551 கோடி ரூபாய் வருமானம்.. எப்படி ? -
காது மடல் ஓட்டைகளுக்கு ஆபரேஷன்! சென்னை நட்சத்திர ஹோட்டலில் தங்கிய மும்பை இன்ஸ்டா பிரபலம் கைது! -
சென்னை ரிசார்ட்டில் பல் மருத்துவர் செய்த காரியம்.. ₹11 லட்சத்துக்காக பவர் பத்திரத்தில் ஆடிய ஆட்டம்! -
கோவை, நீலகிரியில் 2 நாட்களுக்கு மழை வெளுக்க போகுது.. தென் தமிழகத்திலும் மழை கொட்டும்.. வானிலை அலர்ட் -
“அரசு எங்களை ஏமாத்திருச்சு..” தேர்தல் நேரத்தில் போராட்டத்தை கையில் எடுக்கும் டாஸ்மாக் பணியாளர்கள்! -
ஆரோவில் நிலம் 350 கோடி.. ஆளுநர் ஆர்.என்.ரவி, பெண் ஐஏஎஸ் அதிகாரி மீது பறந்த புகார்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை











Click it and Unblock the Notifications