வெறும் அபராதம் மட்டும் போதாது! உரிமத்தையும் ரத்து பண்ணலாம்! ஹைகோர்ட் உத்தரவால் ஆடிப்போன ஆம்னி பஸ்கள்
சென்னை: அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளுக்கு அபராதம் மட்டும் இன்றி உரிமம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் வெளி மாவட்டங்களுக்கு செல்வதற்கான பேருந்து நிலையம் செயல்பட்டு வந்தது. கோயம்பேடு மார்க்கெட் அருகே தனியார் ஆம்னி பஸ்களுக்கும் பிரத்யேக பேருந்து நிலையம் இயங்கி வந்தது. சென்னையில் கோயம்பேடு பகுதியில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளால் நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் சென்னையை அடுத்துள்ள கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் முடிந்த நிலையில், புதிய பேருந்து நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த டிசம்பர் இறுதியில் திறந்து வைத்தார். அதன் பிறகு படிப்படியாக அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இருப்பினும், தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கோயம்பேட்டில் இருந்து பேருந்துகளை இயக்க அனுமதி தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வந்தனர்.
கிளாம்பாக்கத்தில் பேருந்துகளை நிறுத்த போதிய வசதி இல்லை என்றும் கிளாம்பாக்கத்தில் மெட்ரோ ரயில்கள், புறநகர் ரயில்கள் வரும் வரை நகருக்குள் பயணிகளை ஏற்றி இறக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் இருந்து வந்தது. ஆனால் இதை தமிழக அரசு ஏற்க மறுத்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
3 இடங்களை தவிர: இதில், இடைக்கால உத்தரவு பிறப்பித்த சென்னை உயர் நீதிமன்றம், சூரப்பட்டு, போரூர் டோல்கேட் ஆகிய பகுதிகளில் பயணிகளை ஏற்றி இறக்க அனுமதி அளித்தது. ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம், அங்கு வாதங்களை முன்வைக்குமாறு கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையடுத்து, ஆம்னி பஸ்களுக்கு போக்குவரத்து துறை உத்தரவு ஒன்றை வெளியிட்டது. அதில்,
சென்னையில் இருந்து தெற்கு நோக்கி பயணிக்கும் ஆம்னி பஸ்களின் உரிமையாளர்கள் எக்காரணம் கொண்டும் கீழ்க்கண்ட 3 இடங்களை தவிர வேறு எங்கும் பயணிகளை ஏற்றி இறக்க கூடாது என அறிவிக்கப்படுகிறது..
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: சென்னை புறவழிச்சாலையில் போருர் சுங்கச்சாவடி, சென்னை புறவழிச்சாலையில் சூரப்பட்டு சுங்கச்சாவடி, கிளாம்பாக்கம் பேருந்து முனையம் மேற்கண்ட 3 இடங்களை தவிர தெற்கு நோக்கி செல்லும் ஆம்னி பேருந்துகள் வேறு எங்கும் பயணிகளை ஏற்றி இறக்குவதற்கு அனுமதி இல்லை என்பது உச்சநீதிமன்ற தீர்ப்பினால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை மீறி மேற்கூறிய 3 இடங்களை தவிர வேறு இடங்களில் தெற்கு நோக்கி செல்லும் ஆம்னி பேருந்துகள் பயணிகளை ஏற்றி இறக்குவது கண்டறியப்பட்டால் தொடர்புடைய ஆம்னி பேருந்துகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவது மட்டுமல்லாமல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்படும் என எச்சரிக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டது.
உரிமம் நிறுத்தி வைக்கப்படும்: இது ஒருபக்கம் இருக்க ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் பயணிகள் தரப்பில் அவ்வப்போது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இந்த நிலையில் தான், அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளின் உரிமத்தை நிறுத்திவைக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் கூறுகையில், அபராதம் விதிப்பதால் மட்டும் தீர்வு ஏற்பட போவது இல்லை என்றும் தொடர் குற்றத்தில் ஈடுபடும் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டு இருப்பதால் அதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்!












Click it and Unblock the Notifications