ஞாயிறு லாக்டவுன் ரத்து- அனைத்து கடைகளும் திறந்தன. வழக்கம் போல வாகனங்கள் 'சர்புர்’
சென்னை: தமிழகத்தில் 2 மாதங்களாக அமலில் இருந்த ஞாயிறு லாக்டவுன் ரத்து செய்யப்பட்டிருப்பதால் இன்று அனைத்து கடைகளும் வழக்கம் போல திறந்திருந்தன. வாகனங்கள் எந்தவித கட்டுப்பாடுகள் இல்லாமல் இயக்கப்பட்டு வருகின்றன.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இதனால் ஞாயிற்றுக்கிழமைகள் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. பொதுமக்கள் வெளியே நடமாடவும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

கடந்த 2 மாதங்களாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு அடைப்பு போலதான் தமிழகத்தில் இருந்தது. தமிழகத்தின் அத்தனை சாலைகளும் வெறிச்சோடிய நிலையில்தான் ஞாயிற்றுக்கிழமை நிலைமை இருந்தது. தற்போது லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. 2 மாதங்களாக அமலில் இருந்த ஞாயிற்றுக்கிழமை லாக்டவுன் கைவிடப்பட்டுள்ளது.
இதனால் இன்று காலை முதலே அனைத்து கடைகளும் முழு அளவில் திறந்திருந்தன. இறைச்சிகடைகளில்தான் மக்கள் அதிக அளவில் குவிந்தனர். வாகனங்கள் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் வழக்கம் போல இயக்கப்பட்டன.

பொது இடங்களில் முக கவசம் அணிவதை பொதுமக்கள் கடைபிடிக்கின்றனர். ஆனால் மக்கள் நெருக்கமாக கூடும் இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிப்பது காற்றில் பறக்கவிடப்படுகிறது என்பதுதான் கவலைக்குரியது.












Click it and Unblock the Notifications