அண்ணா, கருணாநிதி வழியில்... சிறப்பான ஆட்சியை ஸ்டாலின் தருவார்.. திமுக தொண்டர்கள் நம்பிக்கை
சென்னை: தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை ஒரு முறையாவது நேரில் பார்த்துவிட வேண்டும் என அண்ணா அறிவாலயத்தில் குவிந்துள்ள திமுக தொண்டர்கள், அண்ணா, கருணாநிதி வழியில் ஸ்டாலின் தமிழகத்தில் சிறப்பான ஆட்சியைத் தருவார் என உற்சாகத்துடன் தெரிவித்தனர்.
Recommended Video
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. தமிழகத்தின் 23ஆவது முதலமைச்சராக திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் நேற்று பதவியேற்றுக் கொண்டார். இந்த பதவியேற்கும் நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் எளிமையாக நடைபெற்றது.

கொரோனா பரவல் காரணமாக முதல்வர் பதவி ஏற்கும் விழாவில் தொண்டர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இருப்பினும், முதலமைச்சரான பின் மு.க.ஸ்டாலினை நேரில் காண வேண்டும் என்ற நோக்கத்தில் சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் கொரோனாவையும் பொருட்படுத்தாமல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
அங்கு முதல்வர் ஸ்டாலினைப் பார்க்க முடியவில்லை என்ற வருத்தம் இருந்தாலும் தொண்டர்கள் உற்சாகத்துடன் முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி சிலைகளின் அருகே புகைப்படங்கள் எடுத்துச் செல்கின்றனர்.
இது குறித்து திமுக தொண்டர்கள் கூறுகையில், பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்துள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் அண்ணா, கருணாநிதிக்கு பிறகு பதவியேற்றுள்ள தலைவர் ஸ்டாலின் தமிழகத்தில் சிறப்பான ஆட்சியைத் தருவார் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
“ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பா? தைரியம் இருந்தா சட்டரீதியாக திமுக நிரூபிக்கட்டும்”.. தவெக பதிலடி! -
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்!












Click it and Unblock the Notifications