இன்னொரு திருப்பூர் சம்பவம்.. பெங்களூர் கீர்த்திக்கு பல லட்சம் கொட்டிய பெற்றோர்.. இப்படியுமா கணவன்
பெங்களூர்: பெங்களூர் பனசங்கரி பனசங்கரியில் சித்து வருபவர் குருபிரசாத். இவருக்கும் கீர்த்தி என்ற பெண்ணுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. மேலும் இந்த திருமணத்துக்காக கீர்த்தியின் பெற்றோர் ரூ.35 லட்சம் வரை செலவு செய்ததாக கூறப்படுகிறது. திருமணமான முதல் தம்பதி சந்தோசமாக வாழ்ந்து வந்துள்ளனர். பின்னர் குருபிரசாத் சொந்தமாக வீடு கட்ட முயற்சி செய்துள்ளார். அதற்காக மனைவியிடம் வரதட்சணை வாங்குமாறு வற்புறுத்தினாராம். இதனால் கீர்த்தி எடுத்த முடிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வரதட்சணை என்பது ஒரு காலத்தில் பெண்ணுக்கு சொத்துரிமை வழங்கப்படாத காலக்கட்டத்தில் பெற்றோர்களால் விருப்பப்பட்டு வழங்கப்பட்டது. ஆனால் அதன்பிறகு அது பல வீடுகளில் கட்டாயமாகியது. ஆனால் உண்மையில் வரதட்சணை வாங்குவது சட்டப்படி குற்றம்.

வரதட்சணை கேட்டு பெண்களை கொடுமை செய்தால் சிறையில் உள்ளே போக வேண்டியது வரும். குறிப்பாக வரதட்சணை குற்றம்சாட்டி, பெண் வாழ்க்கையை முடித்துக் கொண்டால், அந்த குடும்பத்தினர் ஏழு வருடம் உள்ளே போக வேண்டியதிருக்கும். அப்படியான சட்டங்கள்இருந்தாலும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறையவில்லை. இன்னும் பல ஊர்களில் பெண்கள் வரதட்சணை கேட்டு கொடுமை செய்யப்படுவது தொடர்கிறது.
திருமணத்திற்கு 35 லட்சம்
பெங்களூர் பனசங்கரி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் குருபிரசாத். இவருக்கும் கீர்த்தி என்ற பெண்ணுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணம் நடந்தது. மேலும் இந்த திருமணத்துக்காக கீர்த்தியின் பெற்றோர் ரூ.35 லட்சம் வரை செலவு செய்தார்களாம்.
சொந்த வீடு ஆசை
இந்தநிலையில் திருமணமான முதல் தம்பதி சந்தோசமாக வாழ்ந்து வந்துள்ளார்கள். பின்னர் குருபிரசாத் சொந்தமாக வீடு கட்ட முயற்சி செய்து வந்திருக்கிறார். இதில் அவருக்கு அதிக பணம் தேவைப்பட்டதாக தெரிகிறது. ஆகையால் தனது மனைவியிடம் உனது பெற்றோரிடம் பணம் வாங்கி தருமாறு குருபிரசாத் கூறினாராம்.
2 மாதங்களாக கேட்டுள்ளனர்
ஆனால் கீர்த்தி இதனை மறுத்து தனது திருமணத்துக்கே பெற்றோர் அதிக செலவு செய்ததாக கூறினாராம். இருந்த போதிலும் குருபிரசாத் தனக்கு கொடுத்த வரதட்சணை குறைவாக இருந்ததாம். தனக்கு கூடுதல் வரதட்சணை வேண்டும் என்று கேட்டு கடந்த 2 மாதங்களாக கீர்த்தியை குருபிரசாத் துன்புறுத்தி வந்தாராம். இதனால் வேதனை அடைந்த கீர்த்தி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.
கீர்த்தி பெற்றோர்
பின்னர் கீர்த்தியின் பெற்றோர் கடந்த மாதம் டிசம்பரில் வங்கி மற்றும் பிற நபர்களிடம் இருந்து கடனாக வாங்கி ரூ.8 லட்சத்தை குருபிரசாத்திடம் கொடுத்து உள்ளனர். அதனை பெற்றுக்கொண்ட குருபிரசாத் தற்போது மீண்டும் கூடுதல் வரதட்சணை வேண்டும் என்று கீர்த்தியை அடித்தார்களாம்.. இருப்பினும் தனது பெற்றோரின் நிலையை அறிந்த கீர்த்தி பணம் கேட்க முடியாமல் மனமுடைந்து காணப்பட்டாராம்.
மருத்துவமனையில் கீர்த்தி
இதுகுறித்து கடந்த 24-ந்தேதி இரவு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த கீர்த்தி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த கணவர் உடனடியாக கீர்த்தியை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு கீர்த்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
கணவனை பிடித்து விசாரணை
இதையடுத்து கீர்த்தியின் பெற்றோர், பனசங்கரி போலீசில் வரதட்சணை கொடுமையால் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாகவும், மகளின் சாவுக்கு கணவர் குருபிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் தான் காரணம் என புகார் அளித்தனர். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கணவர் குருபிரசாத்தை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
தற்கொலை எண்ணம் இருந்தால் அல்லது மன அழுத்தத்தில் இருந்தால், உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டிய இலவச உதவி எண்கள்
Tele MANAS (தேசிய உதவி எண்)14416 : மத்திய அரசின் 24/7 மனநல உதவி மற்றும் ஆலோசனை எண். (1-800-891-4416 என்றும் அழைக்கலாம்).
மாநில உதவி எண் (104) 104 தமிழ்நாடு அரசின் சுகாதார உதவி சேவை (இதுவும் மனநல ஆதரவு வழங்குகிறது).
ஸ்னேகா (Sneha) 044-24640050 சென்னையில் உள்ள தற்கொலை தடுப்பு உதவி அமைப்பு.
AASRA +91-22-27546669 தற்கொலை தடுப்பு மற்றும் ஆலோசனைக்கான 24/7 சேவை.
-
சட்டுபுட்டுனு அள்ளிப் போடுங்க! தங்கத்தை வாங்கி குவிக்கும் ரிசர்வ் வங்கிகள்.. குறுக்கே வந்த மலேசியா! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம்












Click it and Unblock the Notifications