எம்ஜிஆருக்கு சிறுநீரகம் தானம் செய்த அண்ணன் மகள் லீலாவதி சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார்
கடுமையான உடல் நல பாதிப்புக்குள்ளான எம்ஜிஆர் புரூக்ளின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் உயிர் பிழைக்க தனது கிட்னியை தானமாக தந்து ஒரு கிட்னியுடன் 37 ஆண்டுகள் உயிர்வாழ்ந்த எம்ஜிஆரின் அண்ணன் சக்ரபாணியின் மகள் லீலாவதி (71) உடல்நலக்குறைவால் நேற்றிரவு காலமானார்.

எம்ஜிஆர் உடல் நிலை தமிழகமே அழுதது
தமிழக முதல்வராக 1977-ல் பதவி ஏற்ற எம்ஜிஆர் தனது 60 வது வயது வரை ஆரோக்கியமாக இருந்தார். அரசியல் சூழல் அதிக உழைப்பு அவர் உடல் நலனை பாதித்தது. 1984 அக்டோபர் 5ஆம் தேதி அப்போலோ மருத்துவமனையில் எம்ஜிஆர் அனுமதிக்கப்பட்டார். அப்போது, எம்ஜிஆருக்கு காய்ச்சல், சளி மற்றும் லேசான ஆஸ்துமா பிரச்சனை இருப்பதாக அப்போலோ மருத்துவமனையின் செய்திக் குறிப்பு தெரிவித்தது.
எம்ஜிஆர் உடல் நிலைக்குறித்து அதிமுக தொண்டர்கள் பொதுமக்கள் கவலை அடைந்தனர். தமிழகம் முழுவதும் தொண்டர்கள் கண்ணீர் சிந்தினர், ஆலயம் தோறும் பூஜைகள், பிரார்த்தனைகள் நடந்தது. பிரதமர் இந்திரா நேரில் வந்து பார்த்தார்.

திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட எம்ஜிஆர்
1984 அக்டோபர் 13ஆம் தேதி சுகாதாரத் துறை அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், எம்ஜிஆர் உடல்நிலை தேறிவருவதாகக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அன்று நள்ளிரவு எம்ஜிஆருக்கு பக்கவாதம் தாக்கியது. இதனைத் தொடர்ந்து அமைச்சர்களாக இருந்த ஹண்டே, ஆர்.எம்.வீரப்பன், நெடுஞ்செழியன் ஆகியோர் ஆலோசனை நடத்தி எம்ஜிஆரின் உடல்நிலை பாதிப்பு குறித்தும் அவர் சுயநினைவு இல்லாமல் இருப்பதையும் வெளிப்படுத்தினர்.

அமெரிக்கா அழைத்துச் செல்லப்பட்ட எம்ஜிஆர்
அப்போலோவில் அமெரிக்க மருத்துவர் குழு எம்ஜிஆரை சோதித்தது, ஜப்பான் டாக்டர் கானு சென்னை வந்து எம்ஜிஆர் உடல் நிலையை சோதித்தார். மருத்துவர்கள் பரிந்துரைப்படி 1984 நவம்பர் 5ஆம் தேதி எம்ஜிஆர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக அமெரிக்காவின் ப்ரூக்ளின் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். எம்ஜிஆருடன் ஜானகி அம்மையார், ஹண்டே உட்பட 21 பேர் தனி விமானத்தில் அமெரிக்காவின் ப்ரூக்ளின் மருத்துவமனைக்குச் சென்றனர்.
எம்ஜிஆருக்கு உடனடியாக சிறுநீரகம் தேவைப்படுகிறது என்பதை அறிந்த கேரளாவில் வசித்த எம்ஜிஆரின் அண்ணன் எம்ஜி. சக்ரபாணியின் மகள் லீலாவதி உடனடியாக தான் சிறுநீரக தானம் செய்வதாக அறிவித்து எம்ஜிஆருக்கு சிறுநீரக தானம் செய்தார். இதனால் எம்ஜிஆர் பூரண நலம் பெற்றார். 1985 பிப்ரவரி 4ஆம் தேதி 3 ஆம் முறையாக முதல்வராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் தமிழகம் திரும்பினார் எம்ஜிஆர். அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஓடோடி வந்து தானம் செய்த லீலாவதி எம்ஜிஆர் நெகிழ்ச்சி
எம்ஜிஆருக்கு சிறுநீரக தானம் அளித்தது லீலாவதி எனும் தகவல் எம்ஜிஆருக்கு உடனடியாக தெரிவிக்கப்படவில்லை. பின்னர் தெரிந்துக்கொண்ட எம்ஜிஆர் அவரை அழைத்து நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார். லீலாவதியை அதிமுக தொண்டர்கள் நன்றியுடன் நினைவு கூர்ந்தனர்.
இந்நிலையில் கிட்னி தானம் செய்து ஒற்றைக் கிட்னியுடன் 37 ஆண்டுகள் வாழ்ந்த நிலையில் லீலாவதி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று அதிகாலை 2 மணி அளவில் காலமானார். லீலாவதியின் மரணம் அதிமுக தொண்டர்கள், எம்ஜிஆர் விசுவாசிகளிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தனது ஆழ்ந்த இரங்கலைத்தெரிவித்துள்ளார்
அவரது இரங்கல் செய்தி வருமாறு:
"எம்ஜிஆர் 1984-ல் நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவில் புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தபோது, அவருக்குத் தன்னுடைய சிறுநீரகத்தை அளித்து, எம்ஜிஆரை வாழவைத்த லீலாவதி அம்மையார் 37 ஆண்டுகள் இப்பூவுலகில் ஒரு சிறுநீரகத்தோடு வாழ்ந்து இன்று இயற்கை எய்தியதை அறிந்த எம்.ஜி.ஆரின் கோடானுகோடி அன்புத் தொண்டர்கள் அனைவரது நெஞ்சங்களும் மிகுந்த வேதனை கொள்கிறது.
லீலாவதி அம்மையாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் இந்தத் துயரத்தைத் தாங்கிக்கொள்ளக்கூடிய சக்தியையும் தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்''.
இவ்வாறு ஓபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி உள்ளிட்டோர் நேரில் சென்று லீலாவதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். லீலாவதி சில ஆண்டுகளுக்கு முன் பாஜாகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications