அரக்கோணம், காட்டுமன்னார்கோவில் உள்பட 6 தொகுதிகளில் விசிக போட்டி
சென்னை: திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் 6 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்தானது.
தமிழக சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெறுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கான 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அந்த தொகுதிகளும் எவை என்பதை இறுதி செய்ய திருமாவளவன் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவரது கட்சி போட்டியிடும் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் அரக்கோணம், வானூர், செய்யூர், நாகை, திருப்போரூர், காட்டுமன்னார்கோவில் ஆகிய 6 தொகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடுகிறார்கள். இதற்கான வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியாகும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications