இங்கெல்லாம் இன்னிக்கு கரண்ட் கட்டா.. சென்னையின் இதய பகுதியாச்சே! கடகடனு வேலைய முடிங்க!
சென்னை: சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை எந்தெந்த பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது தெரியுமா?
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

மயிலாப்பூர்: லஸ், ஆர்.கே மட் ரோடு, கபாலி தோட்டம், கெனல் பேங்க் சாலை மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
அம்பத்தூர்: மேனம்பேடு புதூர், சித்து ஒரகடம், அபிராமபுரம் அன்னை நகர், மூகாம்பிகை நகர், முத்தமிழ் நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications