தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சிக்கு பிப்ரவரி மாதம் தேர்தல் நடத்த முடிவு? பரபரப்பு தகவல்
சென்னை: தமிழகத்தில் ஊரக பகுதிகளுக்கு மட்டும் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலைலயில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளுக்கு வரும் ஜனவரி இறுதியில் அல்ல்து பிப்ரவரி முதல் வாரத்தில் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக மாநில தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கிராம பஞ்சாயத்து அமைப்புகளில் உள்ள பதவிகளுக்கு மட்டும் வருகிற 27 மற்றும் 30-ந் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஜனவரி 2-ந்தேதி ஓட்டுகள் எண்ணி முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.
அதேநேரம் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி அமைப்புகளில் தேர்தல் எப்போது நடைபெறும் என்பது குறித்து தமிழக தேர்தல் ஆணையர் பழனிச்சாமி அறிவிக்கவில்லை.இதனால் அங்கும் எப்போது தேர்தல் நடக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அவசர சட்டம்
இது தொடர்பாக தேர்தல் ஆணைய வட்டாரங்களில் வெளியான தகவலின் படி, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி அமைப்புகளில் உள்ள தலைவர் பதவிக்கு இதுவரை நடந்து வந்த நேரடி தேர்தலை, மறைமுக தேர்தலாக மாற்றி சமீபத்தில் தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்து இருந்தது.

கால அவகாசம்
ஆனால் மறைமுக தேர்தலுக்கு தேவையான சட்ட விதிகளில் மாற்றம் செய்யவும், மறைமுக தேர்தலை நடத்துவதற்கான நடைமுறைகளை வகுக்கவும் தேர்தல் ஆணையத்துக்கு கால அவகாசம் தேவைப்படுகிறதாம். இதனால் தான் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லையாம்.

தேர்தல்
மறைமுக தேர்தலுக்கான நடைமுறைகளை மேற்கொள்ளும் பணியினை தேர்தல் ஆணையம் இன்னும் 3 வாரங்களுக்குள் முடித்து விடுமாம். அதன் பிறகு ஜனவரி மாத தொடக்கத்தில் நகர்ப்புற பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் தேதி வெளியிடப்பட உள்ளதாம்.

பிப்ரவரியில்
எனவே கிராம பகுதி தேர்தல் முழுமையாக முடிந்த உடன் தேர்தல் ஆணையம் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி அமைப்புகளுக்கு தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வாய்ப்பு உள்ளதாம்.
-
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி












Click it and Unblock the Notifications