காலையில் திமுக.. மாலையில் அதிமுக.. நல்ல நேரம் போயிடக்கூடாதே.. பாமக கவுன்சிலர் திடீர் பல்டி!
பூந்தமல்லி பாமக ஒன்றிய கவுன்சிலர் விளக்கம் தந்துள்ளார்
சென்னை: "நானா.. திமுகவா.. இல்லவே இல்லை.. நல்ல நேரம் என்பதால்தான் திமுக கவுன்சிலர்களுடன் பதவி ஏற்று கொண்டேன்.. மற்றபடி நான் அதிமுகவுக்குதான் ஆதரவு" என்று பாமக ஒன்றிய கவுன்சிலர் திடீர் பல்டி அடித்துள்ளார்.
நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்றனர். அதன்படி, பூந்தமல்லி ஒன்றியத்தில் வெற்றி பெற்ற திமுக ஒன்றிய கவுன்சிலர்களும் பதவி ஏற்றனர்.
பூந்தமல்லி ஒன்றியத்தில் மொத்தம் 28 கிராம ஊராட்சிகளும்,15 ஒன்றிய வார்டுகளும் உள்ளன.. இதில் 28 கிராம ஊராட்சிகளிலும் திமுகவின் அமோக ஆதரவு வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். அதேபோல் ஒன்றியத்தில் உள்ள 15 வார்டுகளில் 10 திமுகவும், 3 இடங்களில் அதிமுக மற்றும் 1 பாமக, 1 சுயேட்சை வெற்றி பெற்றனர்.

கவுன்சிலர்கள்
இதில் 10 இடங்களில் வெற்றி பெற்ற திமுக பூந்தமல்லி ஒன்றியத்தை கைப்பற்றி உள்ளது.. அதனால், வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர்கள் 10 பேரும் நேற்று காலை பதவி ஏற்றுக்கொண்டனர். அதிமுகவிடம் இருந்த ஒன்றிய சேர்மன் பதவிகளை திமுக கைப்பற்றிய நிலையில் அதிமுக கவுன்சிலர்கள் மதியத்திற்கு மேல் பதவி ஏற்று கொள்ள முடிவு செய்தனர்.

பாமக கவுன்சிலர்
மேலும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த பாமக ஒன்றிய கவுன்சிலரும் அதிமுகவுடன் பதவி ஏற்று கொள்வார் என எதிர்பார்த்த நிலையில் திடீரென திமுக கவுன்சிலர்களுடன் கை கோர்த்து பாமக கவுன்சிலர் பத்மாவதி கண்ணனும் பதவி ஏற்றுக்கொண்டார். அத்துடன் அவர்களுடன் சேர்ந்து போட்டோவும் எடுத்து கொண்டார். அதிமுகவின் வெற்றி நிலை மாறியவுடன் பாமக உடனே திமுகவுடன் கை கோர்த்துள்ளது என்று சலசலக்கப்பட்டது.

விளக்கம்
அதே சமயம், இது எதேச்சையாக நடந்திருக்கலாம் என்றும், சொல்லப்பட்டாலும் அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் திடீரென அதிமுக நிர்வாகிகளை கவுன்சிலர் பத்மாவதி கண்ணன் சந்தித்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் சொன்னதாவது:

நல்ல நேரம்
"காலையில் நேரம் நன்றாக இருந்ததால் திமுக கவுன்சிலர்களுடன் பதவி ஏற்றுக் கொண்டேன்... அப்போது திமுக கவுன்சிலர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர்.. நான் எப்போதும் திமுகவுற்கு ஆதரவு இல்லை, எப்போதும் அதிமுகவிற்குதான் ஆதரவு தெரிவிக்கிறேன்" என்று திடீர் பல்டி அடித்தபடி விளக்கம் தெரிவித்துள்ளார். காலையில் திமுகவுடனும், மாலையில் அதிமுகவுடனும் இருந்த பாமக ஒன்றிய கவுன்சிலரால் பூந்தமல்லியில் திமுக, அதிமுக என 2 கட்சியினருமே சற்று குழம்பி போய் உள்ளனர்.
-
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
SC/ST நிதி வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டதா? அது வெறும் அவதூறு.. அமைச்சர் வன்னி அரசு விளக்கம்! -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்!












Click it and Unblock the Notifications