"புதுச்சேரியில்கூட இன்னும் திறக்கலையே.. ஆனால் நாம்?" டாக்டர் ராமதாஸின் ஆதங்க ட்வீட்
மதுக்கடைகளை திறக்ககூடாது என டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்
சென்னை: "மதுவையே முதன்மை வருவாய் ஆதாரமாக கொண்டிருக்கும் புதுச்சேரியில் கூட மதுக்கடைகள் இன்னும் திறக்கப்படவில்லை. ஆனால், நாம்?" என்று டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
கொரோனாவைரஸ் தீவிரமாவதற்கு முன்பிருந்தே அது சம்பந்தமான அறிவுறுத்தல்களை வழங்கி டாக்டர் அன்புமணியும் தினந்தோறும் இதை பற்றி அலர்ட் செய்து கொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொரு நிகழ்வையும் விவரித்து, முன்னெச்சரிக்கையாக இருக்கும்பட அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.. அவ்வப்போது அரசுக்கும் யோசனைகளை தெரிவித்து வருகின்றனர்.

சமூக விலகல் கடைப்பிடிக்க வேண்டும், இன்னும் யாருக்கும் பயமே வரவில்லை, பொதுஇடங்களில் நடமாடுகிறார்கள் என்று சொல்லி கொண்டே இருந்தனர். மூடப்பட்ட மதுக்கடைகள் மூடப்பட்டதாகவே இருக்கட்டும், திறந்துவிட வேண்டாம் என்றும் கேட்டு கொண்டு வருகின்றனர்.
நேற்று அன்புமணி இதை பற்றி ஒரு காட்டமான அறிக்கையே வெளியிட்டிருந்தார்.. "ஏழை மக்களின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டுள்ளன... அவர்கள் யார் கைகளிலும் அடுத்த வேளை சாப்பாட்டுக்குகூட காசு இல்லை. இந்த சூழலில் மதுக்கடைகளை திறந்தால், மனைவியின் தாலியை பறித்து அடகு வைப்பது உட்பட குற்ற செயல்கள் ஏற்படும்.. மதுக் கடைகளை திறக்க ஏற்பாடுகளை செய்து வருவது அதிர்ச்சியளிக்கிறது.. தமிழக அரசின் இந்த முடிவு தவறான நேரத்தில் மேற்கொள்ளப்படும் மிகத் தவறான நடவடிக்கையாகும்" என்று நேரடியாகவே அட்டாக் செய்து கண்டனம் தெரிவித்திருந்தார்.
இப்போது டாக்டர் ராமதாசும் ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்... "மதுவையே முதன்மை வருவாய் ஆதாரமாக கொண்டிருக்கும் புதுச்சேரியில் கூட மதுக்கடைகள் இன்னும் திறக்கப்படவில்லை. ஆனால், நாம்?" என்று கேள்வி எழுப்பி உள்ளார். இதற்கு வழக்கம்போல் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். "மதுவிலக்கை நடைமுறைபடுத்த சரியான நேரம் வந்திருக்கும் நிலையில் தவற விடுவது ஏன்?.. ஏழை குடும்பங்களில் அடுப்பு எரிய மதுவிலக்கை நடைமுறைப்படுத்துங்கள்" என்று கமெண்ட்களை பதிவிடுகின்றனர்.

Recommended Video
எனினும் ஒருசிலர், "பசப்புகளை பார்த்து பார்த்து அலுத்துபோச்சு.. கூட்டணியை விட்டு விலகிவிடுவோம், அதிமுக இனி எக்காலமும் ஆதரிக்கமாட்டோம் என உடைத்து பேச எது தடுக்கிறது? அறிக்கைவிட்டுவிட்டு மதுக்கடைகளை திறக்கும் அதிமுகவோடு பொருந்தா கூட்டணி எதுக்கு? என்றும், "எடப்பாடியாரை சந்தித்து உங்கள் கோரிக்கையை அறிவுறுத்தலாமே? ஏன் தயக்கம்? இதிலும் கூட்டணி தர்மமா?" என்றும் பதில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications