களமிறங்கிய 20000 போலீஸ்.. 400 செக்போஸ்ட்.. 2 கிமீ தாண்டி சென்றாலே செக்.. சென்னையில் மாஸ் கட்டுப்பாடு
சென்னையில் முழு ஊரடங்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் போலீசார் மிக தீவிரமாக கண்காணிப்பு பணிகளை செய்து வருகிறார்கள்.
சென்னை: சென்னையில் முழு ஊரடங்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் போலீசார் மிக தீவிரமாக கண்காணிப்பு பணிகளை செய்து வருகிறார்கள்.
Recommended Video
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இன்று முதல் இங்கு முழு ஊரடங்கு மீண்டும் அமலுக்கு வந்துள்ளது.
இந்த 4 மாவட்டங்களில் 12 நாட்கள் முழுஊரடங்கு பிறப்பிக்கப்படும். சில அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே கட்டுப்பாடுகள் தொடரும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

2 கிமீ வெளியே சென்றால்
சென்னையில் லாக்டவுனுக்கு இடையே அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே செல்லலாம். ஆனால் அருகே இருக்கும் கடைகளுக்கு மட்டுமே செல்ல முடியும். தூரத்தில் இருக்கும் கடைகளுக்கு செல்ல கூடாது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க வாகனங்களில் செல்ல கூடாது. 2 கிமீ தூரம் இருக்கும் கடைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதை தாண்டிய பகுதிகளுக்கு செல்ல கூடாது.

செக் போஸ்ட்
மொத்தம் சென்னை முழுக்க 400 செக் போஸ்ட் அமைக்கப்பட்டு உள்ளது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் எல்லா ஏரியாவிலும் 4 செக் போஸ்டிற்கும் அதிகமாக அமைக்கப்பட்டுள்ளது. சென்னையை 100 பாகமாக பிரித்து ஒரு பகுதிக்கு ஒரு 4 செக்போஸ்ட் என்று அமைத்து இருக்கிறார்கள். இதனால் மக்கள் வெளியே வந்தாலே போலீஸ் கேள்வி கேட்கும். கட்டுப்பாடுகள் மிக மிக கடுமையாக இருக்கும்.

20 ஆயிரம் போலீசார்
சென்னையில் மொத்தம் 20000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு இருக்கிறார்கள். செக்போஸ்ட் பணிகள்,இரவு நேர பணிகள், ரோந்து பணிகள் என்று இவர்களுக்கு தனி தனியாக பணிகள் வழங்கப்பட்டுள்ளது. சென்னை முழுக்க கடுமையான சோதனையில் இவர்கள் ஈடுபடுவார்கள். அதேபோல் போலீசார் டிரோன் கேமரா உதவியுடன் மிக கடுமையான சோதனையும் செய்ய இருக்கிறார்கள்.

மிக கடுமை
சென்னையில் அலுவலகம் செல்லும் பணியாளர்கள் பெரிய அளவில் ஐடி கார்டு அணிய உத்தரவிடப்பட்டுள்ளது. பழைய இ பாஸ் வைத்திருக்கும் நபர்கள் புதிய இ - பாஸ் விண்ணப்பிக்க வேண்டும். சென்னையில் இறைச்சி, மீன் கடைகள் செயல்படாது. அதேபோல் கடைகள் எல்லாம் காலை 8-2 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications