17-ம் நூற்றாண்டில் மதுரை மீது வட இந்தியாவில் இருந்து படையெடுத்து சர்வநாசமாக்கிய வெட்டுக் கிளிகள்!
சென்னை: நாடு தற்போது எப்படி வெட்டுக் கிளிகளால் பேராபத்தை எதிர்கொண்டிருக்கிறதோ அதேபோல் 17-ம் நூற்றாண்டில் மதுரை மாநகரமும் பேரழிவையே சந்தித்திருக்கிறது என்கிறது வரலாறு.
Recommended Video
சுற்றுச் சூழல் செயற்பாட்டாளரான பூவுலகின் நண்பர்கள் சுந்தரராஜன் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

17-ம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டில் சொக்கநாதன் ஆட்சியில் வெட்டுக்கிளி தாக்குதலுக்கு மதுரை உள்ளானதாக காவல் கோட்டம் நாவலில் பதிவு செய்துள்ளார் சுவெ. (சு.வெங்கடேசன் எம்.பி) காவல் கோட்டத்திலிருந்து " சொக்கநாதன் காலத்தில் வானில் தூமகேது தோன்றியது. நிமித்தகர்கள் அதைச் சொல்லியே மக்களைப் பயமுறுத்திக் கொண்டிருந்தனர்.அதற்கேற்றாற்போல ஒரு மாதத்தில் நம்ப முடியாத பேரழிவு விவசாயத்தில் நேர்ந்தது. வடக்கிலிருந்து வெட்டுக்கிளிகள் படையெடுத்து வந்தன.

வட இந்திய வெட்டுக் கிளிகள்
ஒவ்வொன்றும் சோளக்கதிர் அளவு பெரிதாக இருந்தது. மேகக்கூட்டங்கள் போல வந்து அப்படியே செடிகொடிகள் பயிர்களின் மீது மொய்த்தன. நிலமெங்கும் பெருமழை அடிப்பதுபோல நெறுநெறுவென்று சப்தம். அவை எழுந்து பறந்தவுடன் இலைகளற்ற வெறுந்தண்டுகளே எஞ்சின. இரண்டு நாள் படை படையாகத் தெற்கு நோக்கிச் சென்றன. நாடே பசுமையற்று மொட்டையாகப் போய்விட்டது. மாசி மாதம் கதிரடிப்புக் களங்களில் புழுதி பறந்தது.மீண்டும் தூமகேது தோன்றியது.

பட்டினி துயரம்
இரண்டு ஆண்டுகளாக மழை இல்லை. மக்கள் சாணாக் கிழங்குகளைத் தேடிக் காடெல்லாம் அலைந்தனர்.தாதனூரில் பாதிப் பிள்ளைகள் வயிற்றுப் போக்கில் மடிந்தனர். சண்டாள பேதி பரவத் தொடங்கியது. உயிரைத் தக்க வைத்தவர்கள் இறந்தவர்களைத் தூக்கிக்கொண்டு சுடுகாட்டுக்குப் போனார்கள். எல்லா ஊர்களிலும் நாளெல்லாம் சனங்கள் சுடுகாட்டில் கும்பல் கும்பலாக நின்றிருந்தனர்.புதைக்க இடமில்லாமல் ஆனது. தீ எரிந்துகொண்டே இருந்தது.

ஆங்கிலேயர் நூல்களில் பதிவு
மூன்றாண்டுகள் கழித்து நிலைமை இயல்புக்கு மீண்டபோது மூன்றிலொரு பங்கு மக்கள் சுடுகாட்டிலும் மீதிப் பேர் உயிரைப் பிடித்துக்கொண்டு ஊர்களிலும் இருந்தனர்." இது குறித்து பிரான்சிஸின் மதுரை Gazatte மற்றும் நெல்சனின் "மதுரை அரசியல் வரலாறு" நூல்களிலும் குறிப்பு உள்ளது இவ்வாறு சுந்தரராஜன் பதிவு செய்துள்ளார். மதுரையில் சொக்கநாத மன்னரின் ஆட்சிக் காலம் கி.பி. 1662-1682 என்பது குறிப்பிடத்தக்கது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications