Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

1991-க்கு பின் தமிழகத்தில் 10 இடங்களுக்கு மேல் வெல்லாத காங்; திமுகவிடம் 15-18 தொகுதிகள் கேட்குதாமே?

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தலுக்கான திமுக- காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை ஜனவரி 28-ந் தேதி தொடங்க உள்ளது. இப்பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சி தங்களுக்கு 15 முதல் 18 இடங்களை ஒதுக்க வேண்டும் என திமுக குழுவிடம் வலியுறுத்த திட்டமிட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

லோக்சபா தேர்தலில் ஒவ்வொரு மாநிலத்திலும் "இந்தியா" கூட்டணி கட்சிகள் காங்கிரஸுக்கு மிக மிக சொற்பமான இடங்களைத்தான் ஒதுக்குகின்றன. குறிப்பாக டெல்லி, மேற்கு வங்கம், பஞ்சாப், உத்தரப்பிரதேச மாநிலங்களில் போனால் போகிறது என்கிற போக்கில்தான் காங்கிரஸுக்கு சிங்கிள் டிஜிட் இடங்களைக் கொடுக்க திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி கட்சிகள் முன்வந்துள்ளன. நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் கூட்டணி கட்சிகளிடம் 'கவுரவமான' இடங்களைப் பெறக் கூடிய வாய்ப்பு காங்கிரஸுக்கு உள்ளது.

 Lok Sabha Election 2024: Congress seeks 15 to18 Seats From DMK alliance?

ஜனவரி 28-ல் பேச்சுவார்த்தை: இந்த நிலையில் லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியே வெல்லும் வாய்ப்புள்ளது என அனைத்து கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் திமுக கூட்டணியிலும் ஜனவரி 28 முதல் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தொடங்க உள்ளது. ஜனவரி 28-ந் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் காங்கிரஸ் கட்சி குழுவுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

15 முதல் 18 இடங்கள் கேட்கும் காங்கிரஸ்?: திமுகவைப் பொறுத்தவரை காங்கிரஸுக்கு 8 அல்லது 9 தொகுதிகள்தான் என கணக்குப் போட்டு வைத்துள்ளது. ஆனால் காங்கிரஸ் தரப்போ, தமிழ்நாட்டில் காங்கிரஸ் முன்பைவிட வளர்ந்துவிட்டது; அதுவும் ராகுல் காந்தியின் பாதயாத்திரைக்குப் பின்னர் இரு மடங்கு வளர்ந்துவிட்டது; அதனால் 8,9 தொகுதிகள் எல்லாம் காங்கிரஸுக்கு போதாது; அதிகபட்சம் 18 தொகுதிகளை கேட்போம்; குறைந்தபட்சம் 15 தொகுதிகளைப் பெற்றே தீருவோம் என ஆவேசமாக முழங்கிக் கொண்டிருக்கின்றனராம்.

பேராசை கூடாது என எச்சரிக்கும் திமுக: இது தொடர்பாக திமுக வட்டாரங்களில் நாம் பேசிய போது, தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் 18 தொகுதிகள் என்ன 50:50 கூட கேட்கிற காங்கிரஸுக்கு உரிமை உள்ளது. ஆனால் கள நிலவரம் என்ன என்பதை காங்கிரஸ் கொஞ்சம் நினைத்து பார்க்க வேண்டும். உதாரணமாக திருச்சி, கரூர், சிவகங்கை போன்ற தொகுதிகளை காங்கிரஸுக்கு கொடுப்பதாக வைத்துக் கொண்டால் அக்கட்சியால் 100% வெற்றி பெறுவோம் என உத்தரவாதம் தர முடியுமா? ஆசைப்படலாம்தான்.. அதுக்காக பேராசைப்பட்டால் உள்ளதும் போச்சுடா என்கிற கதைதான் காங்கிரஸுக்கு என எச்சரிக்கின்றனர்.

10 சீட்டுக்கு மேல ஜெயிக்காத காங்கிரஸ்: மேலும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் 1991-ம் ஆண்டுக்குப் பின்னர் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் 10 இடங்களுக்கு அதிகமாக வென்றதாக சரித்திரமே இல்லை. 1991-ல் ராஜீவ் காந்தி படுகொலையால் மொத்தம் உள்ள 39 இடங்களில் 28-ல் காங்கிரஸ் வென்றது; ஆனால் 1996, 1998 தேர்தல்களில் ஒரு இடத்தில் கூட காங்கிரஸ் ஜெயிக்கவில்லை. 1999-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் 2 இடத்திலும் 2004-ல் 10 இடங்களிலும் காங்கிரஸ் வென்றது. 2009-ல் 8 இடத்தில் வென்ற காங்கிரஸ் 2014 லோக்சபா தேர்தலில் ஒரு இடத்திலும் வெல்லவில்லை. 2019-ல் திமுக கூட்டணியில் இடம் பெற்று 8 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது. இதுதான் தமிழ்நாடு காங்கிரஸின் தேர்தல் சரித்திரம் என புள்ளி விவரங்களை அடுக்குகின்றனர் திமுக நிர்வாகிகள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+