பாஜக கூட்டணியில் 2 தொகுதி தான்! 9 வேட்பாளர் ரெடினு கூறிய டிடிவி தினகரன் மனம் மாறியது ஏன்? விளக்கம்
சென்னை: வரும் லோக்சபா தேர்தலில் 9 தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர் இருப்பதாக டிடிவி தினகரன் கூறிய நிலையில் அவரது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு பாஜக 2 தொகுதிகளை மட்டுமே வழங்கி உள்ளது. இந்நிலையில் தான் பாஜக கூட்டணி பங்கீட்டில் என்ன நடந்தது? 2 தொகுதியை பெற்றது ஏன்? என்பது பற்றி கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விளக்கமளித்துள்ளார்.
வரும் லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியின் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளது. இந்நிலையில் தான் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமாக கமலாலயத்தில் பாஜக - அமமுக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் தொகுதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம் இன்று கையெழுத்தானாலும் கூட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடும் 2 தொகுதிகளின் பெயர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இதுபற்றி விரைவில் பாஜக அறிவிப்பு செய்ய உள்ளது. தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகுதிகளின் விபரங்களை பாஜக முழுமையாக நாளை வெளியிட வாய்ப்புள்ளது. இந்நிலையில் தான் தொகுதி பங்கீட்டுக்கு பிறகு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பாஜக கூட்டணியில் அமமுக கேட்ட தொகுதிகள் கிடைக்கவில்லையா? தொகுதிகளின் எண்ணிக்கை குறைத்து வழங்கப்பட்டுள்ளதா? என்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அதற்கு டிடிவி தினகரன் பதிலளித்தார். அவர் கூறியதாவது:
‛போதும் என்ற மனமே பொன்செய் மருந்து' என சொல்வார்கள். நாங்கள் பாஜகவிடம் 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள். 9 தொகுதி தந்தாலும் நாங்கள் போட்டியிட தயாராக இருக்கிறோம் எனக்கூறினோம். மேலும் விருப்பப்பட்ட தொகுதியை கேட்டோம். அதோடு வேறு கட்சிகள் எங்களின் தொகுதிகளை கேட்டால் அதுபற்றி இறுதி முடிவு எடுக்கலாம் என முதலிலேயே மத்திய அமைச்சர் எல் முருகன், பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரிடம் தெரிவித்து இருந்தேன்.
முதலில் அவர்கள் என்னிடம் வேறு ஒரு நம்பரை (தொகுதி எண்ணிக்கை) கூறியிருந்தார்கள். அதற்கு நானும் சம்மதம் சொன்னேன். மேலும் கூட்டணிக்கு வரவர கட்சிகள் அதிகரித்தன. இதையடுத்து அவர்கள் என்னிடம் பேசினர். நான் தொகுதிகளை விட்டு கொடுத்தேன். கடைசியாக 2 தொகுதிகளை தந்தனர். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் ஒரு தொகுதியை மட்டும் தாங்க.. இன்னொரு தொகுதியை வேறு கூட்டணி கட்சிக்கு கொடுக்க வேண்டும் என்றால் கொடுங்கள் என்றோம். ஆனால் குறைந்தபட்சம் 2 தொகுதியிலாவது போட்டியட வேண்டும் எனக்கூறி 2 தொகுதியை தந்துள்ளனர்'' என்றார்.
-
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு! -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
வானதி சீனிவாசனுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி.. கோவை வடக்கை குறிவைத்து தீவிர பிரசாரம் -
தலைவரை ஓரங்கட்டியவர்களுக்கு எதுக்கு வாக்கு! அண்ணாமலை ஆர்மி உள்ளடி வேலை! புலனாய்வில் இறங்கிய கமலாலயம் -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
"மாநில நலனையும் பலி கொடுக்க துணிந்துவிட்டார் என்பதே எடப்பாடியின் அமைதிக்கான அர்த்தம்"- சு.வெங்கடேசன் -
“கொடூரமானது.. அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை எதிர்த்து தோற்கடிக்க வேண்டும்”- ப.சிதம்பரம் -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு












Click it and Unblock the Notifications