தொடங்கியாச்சு… வேட்பு மனு தாக்கல்… தமிழகத்தில் ஒரே நாளில் 20 பேர் மனு தாக்கல்
தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது.
Recommended Video

சென்னை:லோக்சபா தேர்தலில் போட்டியிட தமிழகம் முழுவதும் முதல் நாளான இன்று 20 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் 7 கட்டமாக நடத்தப்படுகிறது. முதல்கட்ட தேர்தல் அடுத்த மாதம் 11-ம் தேதி நடக்கிறது.

ஆந்திரா, சிக்கிம், அருணாச்சல பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் லோக் சபா தேர்தலுடன், சட்டசபை தேர்தலும் சேர்த்து நடத்தப்படுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடக்கிறது.
இதையடுத்து, தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட 40 லோக்சபா தொகுதிகள் மற்றும் 18 சட்டசபை தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. இது குறித்து, சென்னையில் செய்தியாளர்களுக்கு தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:தமிழகம் முழுவதும் முதல் நாளான இன்று 20 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வடசென்னையில் 4 வேட்பாளர்களும், தென் சென்னையில் 3 வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்துள்ளனர்.
திருப்பூர் மற்றும் ராமநாதபுரத்தில் தலா 2 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்திருக்கின்றனர். இன்று ஒரே நாளில் மட்டும் மொத்தம் 20 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்று அவர் கூறினார்.
வேட்பு மனுக்களின் மீதான பரிசீலனை மார்ச் 27ம் தேதி நடைபெறும். மனுக்களை திரும்பப் பெற 29ம் தேதி வரை கால அவகாசம் இருக்கிறது. ஏப்ரல் 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மே 23ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications