இந்த 5 தொகுதிகள்.. திமுக, பாஜக, அதிமுக எல்லாம் திக்கி திணற போகுது.. தந்தி டிவி சர்வேயில் சர்ப்ரைஸ்
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 5 தொகுதிகளில் கடுமையான இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி சர்வேயில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதிகளில் பாஜக அதிமுக திமுக இடையே கடுமையான போட்டி நிலவும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் நாளை மறுநாள் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில், வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 21 தொகுதிகளும், அதன் கூட்டணி கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

2024 லோக்சபா தேர்தல் கணிப்புகளை பார்க்கும் முன் 2019 லோக்சபா தேர்தலில் கட்சிகள் பெற்ற தனி தனி வாக்கு சதவிகிதங்களை பார்க்கலாம்.
திமுக கூட்டணி 53.15% வாக்கு சதவிகிதங்களை பெற்றது
திமுக 33.52% வாக்கு சதவிகிதங்களை பெற்றது
காங்கிரஸ் 12.61% வாக்கு சதவிகிதங்களை பெற்றது
அதிமுக கூட்டணி 30.57% வாக்கு சதவிகிதங்களை பெற்றது
அதிமுக 19.39% வாக்கு சதவிகிதங்களை பெற்றது
பாஜக 3.66% வாக்கு சதவிகிதங்களை பெற்றது
பாமக 5.36% வாக்கு சதவிகிதங்களை பெற்றது
தேமுதிக 2.16% வாக்கு சதவிகிதங்களை பெற்றது
நாம் தமிழர் கட்சி 3.90% வாக்கு சதவிகிதங்களை பெற்றது
கருத்து கணிப்பு: லோக்சபா தேர்தல் தொடர்பாக வரிசையாக சர்வேக்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் லோக்சபா தேர்தல் தொடர்பாக தந்தி டிவி மேற்கொண்டு உள்ளன.
மொத்தமாக திமுக 34 இடங்களில் வெல்லும்.
அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது.
பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும்.
இழுபறி நீடிக்கும் இடங்கள் 5
இழுபறி நீடிக்கும் அந்த 5 இடங்கள்:
வேலூர்
திருநெல்வேலி
கோயம்புத்தூர்
கள்ளக்குறிச்சி
பொள்ளாச்சி
ஆகிய இடங்களில் இழுபறி நீடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில்
வேலூர்
திருநெல்வேலி
கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளில் திமுக - பாஜக இடையே இழுபறி நீடிக்கும்.
கள்ளக்குறிச்சி
பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக - திமுக இடையே இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வாக்கு சதவிகிதம்:
திமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 42 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர்.
அதிமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 34 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர்.
பாஜகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 18 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர்.
நாம் தமிழருக்கு வாக்கு அளிப்போம் என்று 5 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர்
பாஜக வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதி : புதுச்சேரியில் பாஜகவிற்கான வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
"சிதமுக-விற்கு லக்".. அதிமுக கூட்டணியில் புதிய கட்சி.. ஒரு தொகுதியை ஒதுக்கிய எடப்பாடி பழனிச்சாமி! -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி?












Click it and Unblock the Notifications