லோக்சபா தேர்தல் வியூகம்: அமித்ஷாவை தொடர்ந்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று சென்னை வருகை!
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தொடர்ந்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று சென்னை வருகை தருகிறார். சென்னையில் பாஜக நிர்வாகிகளுடன் லோக்சபா தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துகிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்.
2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அதிமுக தயவுடன் கணிசமான தொகுதிகளில் போட்டியிட்டு வெல்ல வேண்டும் என்பது பாஜகவின் விருப்பம். தமிழ்நாட்டில் எப்படியாவது பாஜகவுக்கு சில இடங்கள் பெற்றாக வேண்டும் என்பதில் அக்கட்சியின் டெல்லி மேலிடம் மும்முரமாக இருக்கிறது. இதனால் இப்போதே லோக்சபா தேர்தல் பணிகளை பாஜக தொடங்கிவிட்டது.

அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வருகை தந்தார். தென்சென்னை லோக்சபா தொகுதி நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். வேலூர் பொதுக் கூட்டத்தில் பேசினார் அமித்ஷா. தென்சென்னை
ஆலோசனைக் கூட்டத்தில்தான், தமிழர் ஒருவர் பிரதமராக வேண்டும் என அமித்ஷா பேசியதாக தகவல்கள் பரவின. இதனால் பிரதமர் வேட்பாளர் மோடியை அமித்ஷா எதிர்க்கிறாரா? என சர்ச்சைகள் வெடித்து ஓய்ந்தன.
அதேபோல தமிழ்நாட்டில் பாஜக 25 தொகுதிகளில் வெல்லும் என அமித்ஷா பேசிய பேச்சின் அனல் இன்னமும் ஓயவில்லை. அமித்ஷாவின் இந்த கருத்து தனிப்பட்ட கருத்து; அதிமுக 40 தொகுதிகளிலும் வெல்லும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்திருந்தார். அமித்ஷாவின் வருகையைத் தொடர்ந்து தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது மேலும் சர்ச்சையானது.
இந்நிலையில் மத்திய பாதுகாப்புத் துறை ராஜ்நாத்சிங் இன்று சென்னை வருகை தருகிறார். சென்னையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகளுடன் லோக்சபா தேர்தல் வியூகம் தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார்.
இதனைத் தொடர்ந்து தாம்பரம் அருகே இரும்புலியூரில் இன்று மாலை நடைபெறும் மத்திய பாஜக அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இப்பொதுக் கூட்டம் முடிந்த பின்னர் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார் ராஜ்நாத்சிங்.
-
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications