தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைந்தது… நாளை வேட்பு மனுக்கள் பரிசீலனை
Recommended Video

சென்னை: 2 ம் கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறும் தமிழகம். புதுச்சேரி உள்ளிட்ட 97 மக்களவை தொகுதிகளுக்கு வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்தது. கடந்த வாரம் செவ்வாய்கிழமை முதல் 6 நாட்களில் 1000-க்கும் மேற்பட்டோர் வேட்புமனுத்தாக்கல் செய்தனர்
கடைசி நாளான இன்று குக்கர் சின்னம் மறுக்கப்பட்ட அமமுக கட்சியினர் உட்பட முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் பலர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அதே நாளில், தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டசபைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
விஐபி தொகுதி தேனி.. முழுமை ரவுண்ட் அப்
இதையொட்டி, கடந்த 19-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது. நேற்று ஒரே நாளில் மட்டும் 300-க்கும் மேற்பட்டோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
வரும் 29-ம் தேதி மாலை 3 மணி வரை வேட்பு மனுக்களை வாபஸ் பெறலாம். அன்று மாலை 5 மணியளவில் 39 மக்களவைத் தொகுதி, 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
இதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 18-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மே 23 ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன.












Click it and Unblock the Notifications