மேஷ ராசிக்காரர்கள் எந்த ராசிக்காரர்களுடன் ஜோடி சேர்ந்தால் கல்யாண வாழ்க்கை இனிக்கும் தெரியுமா
ராசி பார்த்து காதலிக்க முடியாதுதான் என்றாலும் நமக்கு ராசியான ஜோடியை பார்த்து காதலித்தால் அந்த லவ் சக்சஸ் ஆவதோடு அந்த திருமண பந்தமும் பல ஆண்டுகள் நிலைத்து நிறும்.
சென்னை: திருமணம் என்பது இரு மனங்கள் இணையக்கூடிய நிகழ்வுதான். சிலருடைய திருமண வாழ்க்கை மட்டுமே வெற்றிகரமானதாக இருக்கிறது. பலரது வாழ்க்கை சண்டை சச்சரவு என தினம் தினம் போர்க்களமாகவே இருக்கிறது. கல்யாண வாழ்க்கையோ காதல் வாழ்க்கையோ சந்தோஷமாக இருக்க வேண்டும் எனில் சரியான ராசி பார்த்து ஜோடி சேர வேண்டும். எந்த ராசிக்காரர்கள் யாருடன் ஜோடி சேர்ந்தால் வெற்றிகரமான மன வாழ்க்கை அமையும் என்று பார்க்கலாம்.
நெருப்பு ராசிகள், நீர் ராசிகள், காற்று ராசிகள், நில ராசிகள் என நான்கு வகை தத்துவத்தில் ராசிகள் இருக்கின்றன. இந்த ராசிகள் சரியான ராசி பார்த்து இணைய வேண்டும். சரியான ராசியோடு ஜோடி சேராவிட்டால் திருமண வாழ்க்கையில் சண்டைகள் அதிகரிக்கும் அந்த மண வாழ்க்கை பிரிவு வரை கொண்ட போய் விட்டு விடும்.
மேஷம், ரிஷபம்,மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம்,விருச்சிகம், தனுசு. மகரம், கும்பம், மீனம் ஆகிய 12 ராசிகளில் எந்த ராசிக்காரர்கள் யாருடன் ஜோடி சேர்ந்தால் வெற்றிகரமான திருமண வாழ்க்கை அமையும் என்று பார்க்கலாம்.

மேஷம் கடகம்
மேஷ ராசி அதிபதி செவ்வாய் பகவான். நெருப்பு ராசிக்காரர்கள் துணிச்சலும், நம்பிக்கையும் மிக்கவர்கள்.
கடக ராசிக்கு அதிபதி சந்திரன் மனோகாரகன். நெருப்பான மேஷ ராசியினாரை கடக ராசியினர் திருமணம் செய்து கொண்டால் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு சந்தோஷமாக வாழ்க்கை நடத்துவார்களாம்.

மேஷம் மற்றும் கும்பம்
மேஷ ராசி அதிபதி செவ்வாய். ரத்தத்தின் அதிபதி எப்போதும் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருக்கும் இவர்கள் போர் குணம் கொண்டவர்கள். உணர்ச்சி வசப்படுபவர்களாக இருப்பார்கள். காதலில் வெற்றி பெற தைரியமும் சுறுசுறுப்பும் அவசியம். கும்ப ராசியின் அதிபதி சனிபகவான். பொறுமைசாலிகள். ஒருவரின் உணர்ச்சிகளை புரிந்து கொண்டு எப்படி கையாள்வது என்பதை நன்கு அறிந்து கொண்டவர்கள். இந்த இரண்டு ராசிக்காரர்களும் இணைந்தால் மண வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது.

ரிஷபம் விருச்சிகம்
காதல் நாயகன் சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்டவர் ரிஷபம் ராசிக்காரர்கள். ரிஷபம் ராசியில் பிறந்தவர்களுக்கு விருச்சிக ராசிகாரர்களுடன் திருமண வாழ்க்கை அமையும். ரிஷபம் நில ராசி, விருச்சிகம் நீர் ராசி எனவே நீரும் நிலமும் இணைந்து இல்லறத்தில் காதல் கெமிஸ்ட்ரி அதிகரிக்கும்.

ரிஷபம் மற்றும் மகரம்
ரிஷப ராசி அதிபதி சுக்கிரன், மகர ராசி அதிபதி சனி. சுக்கிரனும் சனியும் நட்பானவர்கள் நில ராசிக்காரர்கள் இருவரின் குணாதிசயங்களும் ஒன்றாக இருப்பதால் காதல் வாழ்க்கையாக இருந்தாலும் சரி, திருமண வாழ்க்கையாக இருந்தாலும் சரி இருவரிடையே நம்பிக்கையும், புரிதலும் இருக்கும் கல்யாண வாழ்க்கை ருசிக்கும்.

மிதுனம் மற்றும் துலாம்
மிதுன ராசிக்கு அதிபதி புதன் பகவான். கல்வி, ஞானம், தனம் ஆகியவற்றை தரக் கூடியவர். மிதுன ராசியினரின் மற்றவரின் உணர்வுகளைப் புரிந்து நடக்கக் கூடிய மன நிலையைக் கொண்டிருப்பார்கள். துலாம் ராசிக்கு சுக்கிரன் அதிபதி துலாம் ராசியினர் எதை ஏற்றுக் கொள்ளக் கூடிய சமாதானத்தை விரும்பக்கூடிய மனநிலை கொண்டவர்கள். இதனால் ராசிக்காரர்கள் காதல் திருமணத்தில் இணைவதால் வெற்றிகரமான மண வாழ்க்கையாக அமையும்.

சிம்மம் மற்றும் துலாம்
சிம்ம ராசிக்கார அதிபதி சூரியன். நெருப்பு ராசியான சிம்மத்தில் பிறந்தவர்கள் ஆளுமை மிக்கவர்கள். தன்னம்பிக்கையும், ஆதிக்கமும் செலுத்தக்கூடியவர்கள். துலாம் ராசியினர் காற்று ராசிக்காரர்கள். சமாதானத்தை விரும்புபவர். காதலை விரும்புபவர்கள். இந்த இரண்டு ராசிகள் இணைந்தால் மனம் ஒத்த தம்பதிகளாக ஒற்றுமையாக வாழ்க்கை நடத்துவார்கள்.

மிதுனம் கடகம்
புதனை ராசி அதிபதியாகக் கொண்டவர்கள் மிதுன ராசிக்காரர்கள். இவர்கள் தங்களுடைய துணையை அளவுக்கு அதிகமாக விரும்புவார்கள். மிதுன ராசிக்காரர்கள் மிகவும் பொறுமையானவர்கள். மிதுன ராசிக்காரர்களுக்கும் கடகம் ராசிக்காரர்களுக்கும் காதல் புரிந்துணர்வு அபரிமிதமாக இருக்கும்.

கன்னி விருச்சிகம்
கன்னி ராசி உள்ளவர்களுக்கு மகரம், விருச்சிகம் ராசி உள்ள வாழ்க்கை துணைகள் பொருத்தமாக இருப்பார்கள். கன்னி ராசி நில ராசி மகரம் ராசி நில ராசி, விருச்சிகம் நீர் ராசி. இவர்களுடைய வாரிசு அறிவாளியாக இருக்கும்.

மீனம் மற்றும் கடகம்
மீன ராசி அதிபதி குரு. கடக ராசி அதிபதி சந்திரன். இந்த இரண்டு ராசிகளும் நீர் ராசிகள். இதனால் இரு ராசிகளிடம் ஒத்த குணங்கள் அதிகம் இருப்பதால் காதல், அன்பு என எதுவாக இருந்தாலும் ஒருவருக்கு ஒருவர் நன்றாக ஒத்துப்போகும். திருமணம் செய்து கொண்டால் ஒற்றுமையாக இருப்பார்கள்.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications