Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆதார்+ கைரேகை.. இல்லாவிட்டால் சமையல் கேஸ் சிலிண்டர் கனெக்சன் ரத்து? திடீரென வந்த எஸ்எம்எஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மே 31ம் தேதிக்குள் கேஸ் ஏஜென்சிக்கு வந்து ஆதார் மற்றும் கைரேகை வைக்காவிட்டால் எல்பிஜி கனெக்சன் ரத்தாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.. இது தொடர்பாக எஸ்எம்எஸ் ஒன்று பாரத் கேஸ் ஏஜென்சி தரப்பில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம் கடந்த 2016ம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கும் மக்களுக்கு இலவசமாககேஸ் சிலிண்டா் இணைப்பு வழங்க வேண்டும் என்று இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்களுக்கு இலவமாக கேஸ் இணைப்பு வழங்கப்பட்டது.

LPG connection likely to be canceled if fingerprint is not submit by 31st May

தமிழ்நாட்டை பொறுத்தவரை 41 லட்சம் பேர் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் இலவச கேஸ் இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இவர்களோடு சேர்த்து தமிழகத்தில் 2.33 கோடி பேர் சமையல் எரிவாயு இணைப்பு பெற்றுள்ளனர். தமிழகத்தில் உஜ்வாலா திட்டத்தில் கேஸ் இணைப்பு பெற்றுள்ளவர்களுக்கு மானியத்தில் சிலிண்டர் வழங்கப்படுகிறது. ஒரு சிலிண்டருக்கு 300 ரூபாய் மானியம் கிடைக்கும். உதாரணமாக தற்போது சிலிண்டர் மற்றவர்களுக்கு 800 ரூபாய் என்றால், உஜ்வாலா திட்டத்தில் உள்ளவர்களுக்கு வெறும் 500 ரூபாய் அளவிற்கு தான் சிலிண்டர் தரப்படுகிறது.

LPG connection likely to be canceled if fingerprint is not submit by 31st May

சமையல் எரிவாயு மானியத் திட்டத்தில் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் சமையல் கேஸ் சிலிண்டர்களை வீடுகளுக்கு வினியோகம் செய்து வருகின்றன. இதுதவிர அதானிக்கு சொந்தமான டோட்டல் கேஸ், ஐநாக்ஸ் எல்என்ஜி உள்பட சில தனியார் நிறுவனங்களும் சிலிண்டர் வினியோகம் செய்கின்றன.

இந்நிலையில் சமையல் கேஸ் சிலிண்டா் இணைப்பை பெற்றுள்ள வாடிக்கையாளர்களின் உண்மைத்தன்மையை சரிபார்க்கும் வேலைகள் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது... இதற்காக வாடிக்கையாளரின் கைவிரல் ரேகையை பதிவு செய்யும் பணியை நிறுவனங்கள் தொடங்கி உள்ளன.

எண்ணெய் நிறுவனங்கள் மானிய விலையில் சமையல் கேஸ் சிலிண்டர்கள் வீடுகளுக்கு வினியோகம் செய்கின்றன. பொதுமக்கள் சிலிண்டர் வாங்கியதும், வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் மத்திய அரசின் மானியத்தொகை செலுத்தப்படுகிறது. 'பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா' திட்டத்தின் கீழ், இலவசகேஸ் இணைப்பு பெற்ற பயனாளிகளுக்கு கூடுதல் மானியம் 300 ரூபாய் வழங்கப்படுகிறது.

இந்த சூழலில் மத்திய அரசு அறிவுறுத்தலின்படி, இலவச கேஸ் பயனாளிகளுக்கு மட்டும் முதலில் கைரேகை பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது, அனைத்து வாடிக்கையாளருக்கும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. தற்போது கேஸ் ஏஜென்சிகளில், கைரேகை மற்றும் முக பதிவு வாயிலாக, வாடிக்கையாளரின் சரிபார்ப்பு நடந்து வருகிறது. ஏஜென்சிக்கு வர முடியாத மூத்த குடிமக்களுக்கு, டெலிவரி ஊழியர்களின் செல்போன் செயலி மூலம், முக பதிவு செய்யப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் மே 31ம் தேதிக்குள் கேஸ் ஏஜென்சிக்கு வந்து ஆதார் மற்றும் கைரேகை வைக்காவிட்டால் எல்பிஜி கனெக்சன் ரத்தாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக பாரத் கேஸ் நிறுவனம் சார்பில் எஸ்எம்எஸ் ஒன்று நுகர்வோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாடிக்கையாளரின் உண்மை சரிபார்ப்பு பணிக்கு அவகாசம் நிர்ணயிக்கப்படவில்லை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். மேலும் கைரேகை பதியவில்லை என்றாலும் தொடர்ந்து சிலிண்டர் வினியோகம் செய்யப்படும் என்றும் வாடிக்கையாளர்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+