வீட்டு கேஸ் சிலிண்டர்.. அட வந்தாச்சு சிலிண்டர் "அயர்ன் பாக்ஸ்".. இனி "வெளுத்துக் கட்டுங்க.. சபாஷ்
சென்னை: கேஸ் சிலிண்டர் விலை உயர்வு குறைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்திருக்கும் நிலையில், எல்பிஜி நிறுவனம் முக்கிய அதிரடியை கையில் எடுத்துள்ளது.
"பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா" என்ற பெயரில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியால் உத்தரபிரதேசத்தின் பல்லியாவில் மே 1, 2016 அன்று இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.

யோஜனா: இந்த திட்டத்தின் பயனாளிகளுக்கு காஸ் அடுப்பும், முதலாவது சிலிண்டரும் இலவசமாக வழங்கப்படும். பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும், இந்த உஜ்வாலா யோஜனா திட்டம் அறிவிக்கப்பட்டது. இது மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் முதல் சமூக நலத் திட்டமாகும்.
தகுதிகள்: பெண்களே இந்த திட்டத்தின் பயனாளிகள் என்பதால் இதற்கு விண்ணப்பிக்கும் பெண்கள் 18 வயதிற்கு மேல் இருக்க வேண்டும். அவரும் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் பெயரில் இதற்கு முன்பு எல்பிஜி கணக்கு ஏதும் இருக்க கூடாது. விண்ணப்பங்களை பரிசீலனை செய்த பிறகு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தகுதியான நபர்களுக்கு சிலிண்டர் இணைப்புகளை வழங்கும்.
இந்நிலையில், எல்பிஜி கேஸ் சிலிண்டரின் சேவை, அடுத்தக்கட்டமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.. அதன்படி, இந்தியன் ஆயில் நிறுவனமமானது, குறைந்த செலவில், அதிக பயன்களை தரக்கூடிய LPG காஸ் சிலிண்டரில் இயங்கும் இஸ்திரி பெட்டிகளை, விரைவில் அறிமுகம் செய்ய போகிறதாம்..
கேஸ் சிலிண்டர்: எல்பிஜி காஸ் சிலிண்டரில் இயங்கும் அயர்ன்பாக்ஸ செலவு மிகவும் குறைவு என்கிறார்கள்.. அதனால் முதல்கட்டமாக, சென்னை உள்ளிட்ட நகரங்களில், 5 கிலோ எல்பிஜி சிலிண்டரில் இயங்கக்கூடிய, அயர்ன்பாக்ஸ்களை இந்தியன் ஆயில் நிறுவனம் செயல்படுத்த முடிவு செய்துள்ளது... இந்த அயர்ன் பாக்ஸ், வெறும் 2 நிமிஷங்களிலேயே சூடாகிவிடுமாம்..
வீட்டில் சமையல் கேஸ் சிலிண்டரை பயன்படுத்துவது போலவே, தள்ளுவண்டியில் பாதுகாப்பாக இந்த இஸ்திரியை பயன்படுத்த முடியும் என்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, கரியை எரிப்பதால் வெளியேறும் கார்பன் - டை - ஆக்சைடு போன்றவற்றால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பும் ஏற்படாது என்று நம்பிக்கை தருகிறார்கள். விரைவில் பயன்பாட்டுக்கு வரஉள்ளதால், இதன் சேவை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
விலை குறைவு: கடந்த 2018-லேயே இந்த அயர்ன்பாக்ஸ் கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், விலை அதிகமாக இருந்தால், பெரிய வரவேற்பு அப்போது கிடைக்கவில்லை. ஆனால், இதை பயன்படுத்தியவர்கள், வழக்கமாக வரும் கரண்ட் பில்லை விட, டபுள் மடங்கு குறைந்த அளவுதான் செலவாகிறதாக சொன்னார்கள்.. ஒரு மணி நேரத்திற்கு 50 பைசா மட்டும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
இப்போது விலையும் குறைந்து, மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளதாம். இந்த சிலிண்டர் சலவைப் பெட்டி ஒரு வரப்பிரசாதம்தான். சலவைத் தொழிலாளர்களே.. இனி "வெளுத்துக்கட்டுங்கள்"!












Click it and Unblock the Notifications