திமுக எம்பிக்களை அழைத்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் நடந்த திடீர் ஆலோசனை.. என்ன பேசினார்கள்?
திமுக தலைமை அலுவலகத்தில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
Recommended Video
சென்னை: திமுக தலைமை அலுவலகத்தில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் திமுக எம்பிக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
லோக்சபாவில் திமுக 20 எம்பிகளுடன் பலமான கட்சியாக வலம் வந்து கொண்டு இருக்கிறது. கடைசியாக நடந்த வேலூர் லோக்சபா தேர்தலில் திமுக வென்றது அக்கட்சிக்கு மேலும் உத்வேகத்தை அளித்துள்ளது.
அதேபோல் காஷ்மீர் பிரச்சனையில் திமுகவின் நிலைப்பாடு தேசிய அளவில் விவாதிக்கப்பட்டதும், கட்சியின் பெயர் பல்வேறு நாடுகளில் பிரபலம் ஆனதும் திமுகவிற்கு உத்வேகம் அளித்துள்ளது.
ஆலோசனை
இந்த நிலையில்தான் சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் திமுக எம்பிக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த ஆலோசனை 11 மணி வரை நடைபெற்றது. 20 எம்பிக்களும் இதில் கலந்து கொண்டனர்.
யார் எல்லாம்
அதேபோல் ராஜ்யசபா எம்பிக்களும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. கனிமொழி, டி. ஆர் பாலு, ஆ. ராசா ஆகிய முக்கிய எம்பிக்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு முதல்நாள்தான் இந்த எம்பிக்கள் எல்லோரும் தங்கள் தொகுதிக்கு சென்று மக்களுடன் உரையாடினார்கள்.
எப்படி மக்கள்
இந்த நிலையில் மக்கள் சொன்ன கருத்துக்களை எல்லாம் இன்று ஆலோசனையின் போது திமுக எம்பிக்கள் ஸ்டாலினிடம் தெரிவித்தனர். மக்களின் எதிர்பார்ப்பு என்ன, எம்பி நிதியை எப்படி மக்களுக்கு செலவு செய்வது என்பது குறித்து ஆலோசனை செய்து உள்ளனர்.
உள்ளாட்சி தேர்தல்
அதேபோல் உள்ளாட்சி தேர்தலுக்கு எப்படி தயார் ஆக வேண்டும் என்பது குறித்தும் இதில் பேசியுள்ளார். காஷ்மீர் பிரச்னைக்கு திமுக எடுத்த நிலைப்பாடு குறித்து டெல்லியில் எப்படி ரெஸ்பான்ஸ் கொடுத்தார்கள். காங்கிரஸ் தரப்பில் என்ன சொல்கிறார்கள் என்றெல்லாம் ஆலோசனை செய்துள்ளனர்.
மிக முக்கியம்
அதேபோல் சமூக வலைத்தளங்களில் திமுகவிற்கு எதிராக பரப்பப்படும் கருத்துக்கள் குறித்தும் இதில் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. அதாவது சமூக வலைத்தளங்களில் சமீப நாட்களாக திமுகவிற்கு எதிராக தவறான புள்ளி விவரங்களுடன் சிலரால் வீடியோக்கள் வெளியிடப்படுகிறது. இதை எப்படி எதிர்கொள்வது என்றும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.