பாஜகவின் அரசகுமார் நேர்மையாக பேசி இருக்கிறார்.. நன்றி.. புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின்!
பாஜகவின் மாநில துணை தலைவர் அரசகுமார் மிகவும் பேசி இருக்கிறார் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை: பாஜகவின் மாநில துணை தலைவர் அரசகுமார் மிகவும் பேசி இருக்கிறார் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் நடைபெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ணன் இல்ல திருமண விழா தற்போது தமிழக அரசியலில் புதிய புயலை கிளப்பி இருக்கிறது. பாஜக உறுப்பினர்கள் பலர் இந்த விழாவில் கலந்து கொண்டார்கள்.
பாஜகவின் மாநில துணை தலைவர் அரசகுமார் இந்த விழாவில் கலந்து கொண்டார்.
ஸ்டாலின் கலந்து கொண்டார்
இந்த விழாவில் திமுக தலைவர் ஸ்டாலினும் கலந்து கொண்டார். ஸ்டாலினை வைத்துக்கொண்டே மேடையில் பேசிய பாஜகவின் மாநில துணை தலைவர் அரசகுமார், கூவத்தூர் சம்பவத்தின்போதே முதல்வராகியிருக்க முடியும், அவர் அப்போது அப்படி எல்லாம் செய்யவில்லை. அவர் விதிகளுக்கு முரணாக செயல்படவில்லை. அவர் கடைசி வரை ஜனநாயகத்திற்காக அமைதியாக இருந்தார்.
காலம் வரும்.. கட்டாயம் ஸ்டாலின் முதல்வர் ஆவார்.. பாஜக மாநில துணை தலைவர் பரபரப்பு.. என்ன நடக்கிறது?
என்ன சொன்னார்
தமிழக முதல்வராக ஸ்டாலின் விரைவில் பொறுப்பேற்பார். காலம் வரும் கட்டாயம் ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார். தமிழகம் விரைவில் திமுக தலைவர் ஸ்டாலினை முதல்வராக பார்க்கும் என்று குறிப்பிட்டார். அவரின் இந்த பேச்சு தமிழக அரசியலில் நிறைய குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்டாலின் பதில்
இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் அதே மேடையில் பதில் அளித்தார். அதில், தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் . 2021ல் திமுக கூட்டணிதான் ஆட்சி அமைக்கும். மக்களின் ஆதரவு எங்களுக்கு இருக்கிறது. மக்கள் அதை பார்க்க போகிறார்கள்.
மிசா எப்படி
நான் மிசாவில் கைத்தானத்தை கூட விமர்சனம் செய்கிறார்கள். தேவையில்லாமல் சர்ச்சைகளை எழுப்புகிறார்கள். நான் மிசாவில் கைதானேன், நான் ஜெயிலுக்கு போனேன் என்பதை நானே சொல்வது வெட்கமாக இருக்கிறது.
நன்றி
என்னை முதல்வராவேன் என்று கூறிய அரசகுமாருக்கு நன்றி. தான் இருக்கும் கட்சி மீதும், அதிகாரம் மீதும் எந்த விதமான அச்சமும் இல்லாமல் அவர் பேசி இருக்கிறார்கள். மிகவும் நேர்மையாக அரசகுமார் உண்மையை பேசி உள்ளார், என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.