ஜெயிலுக்கு போனால் ஏசியும், சோஃபாவுமா தருவாங்க?.. ஜெயக்குமாருக்கு அமைச்சர் மா.சு. கேள்வி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறையில் போதிய வசதிகள் கிடைக்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார்.

Recommended Video

    சிறையில் கட்டாந்தரையில் படுத்தேன் - ஜெயக்குமார்

    தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அப்போது சென்னை 49 ஆவது வார்டில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் திமுகவைச் சேர்ந்த நரேஷ் கள்ள ஓட்டுப் போட்டதாக முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.

    அப்போது அங்கிருந்த அதிமுகவினர் நரேஷ் மீது தாக்கினார். அப்போது அவர்களை விலக்கிவிட்ட ஜெயக்குமார், நரேஷை அரை நிர்வாணப்படுத்தி போலீஸிடம் ஒப்படைத்தார்.

    ஜெயக்குமார் கைது

    ஜெயக்குமார் கைது

    இதையடுத்து நரேஷின் புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து போலீஸார் கடந்த 21 ஆம் தேதி இரவு கைது செய்தனர். இதையடுத்து அவர் மீது இருவேறு வழக்குகள் பதியப்பட்டு ஜாமீனில் வெளியே வர முடியாத நிலை இருந்தது.

    20 நாட்களுக்கு பிறகு ஜாமீன்

    20 நாட்களுக்கு பிறகு ஜாமீன்

    20 நாட்களுக்கு பிறகு அவருக்கு ஜாமீன் கிடைத்தது. அதன்படி கடந்த 12 ஆம் தேதி காலை ஜெயக்குமார் புழல் சிறையிலிருந்து விடுதலையானார். அவரை வரவேற்க சிறைக்கு வெளியே நிறைய ஆதரவாளர்கள் திரண்டு பட்டாசுகளை வெடித்து ஆரவாரமாக வரவேற்றனர். இதையடுத்து ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

    3 மணி நேரம்

    3 மணி நேரம்

    அப்போது அவர் கூறுகையில் கைது செய்யப்பட்டதும் 3 மணி நேரமாக என்னை காரில் வைத்து சென்னையை சுற்றிக் காட்டினார்கள். தீவிரவாதிகளை அடைக்கும் சிறையில் என்னை அடைத்திருந்தனர். அங்கு குடிப்பதற்கு தண்ணீர் கூட இல்லை. பாய் இல்லை. இதனால் கட்டாந்தரையில் படுத்திருந்தேன் என்றார்.

    மா சுப்பிரமணியன் பதில்

    மா சுப்பிரமணியன் பதில்

    இதற்கு அமைச்சர் மா சுப்பிரமணியன் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில் ஜெயிலுக்குச் சென்றவர்களுக்கு ஏசியும் சோஃபாவுமா கொடுப்பார்கள்? குற்றம் செய்தவர்கள் தவறை உணர வேண்டும் என்பதற்காகத்தான் தண்டனை வழங்கி சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

    அமைச்சர் மா சுப்பிரமணியன் பதிலடி

    அமைச்சர் மா சுப்பிரமணியன் பதிலடி

    இதெல்லாம் சுதந்திரத்திற்கு முன்னதான சிறைச்சாலை அனுபவங்கள். சும்மா வெளியே இருப்பவர்கள் சொல்லி பார்த்திருப்பார். வேண்டுமானால் அவர் கூட இருக்கும் 2 பேரை ஜெயிலுக்குச் சென்று பார்த்து வரச் சொல்லுங்கள் என மா சுப்பிரமணியன் விமர்சனம் செய்திருந்தார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனமும் அதற்கு அமைச்சர் மா சுப்பிரமணியன் பதிலடியும் வைரலாகி வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+