Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெட்ரா பேக்கில் 90 மில்லியுடன் வாட்டர் மிக்ஸ் செய்யுங்கள்.. அமைச்சருக்கு தங்க மோதிரம் பரிசாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கலப்படத்தை தடுக்க டெட்ரா பாக்குகளில் டாஸ்மாக் மதுபானத்தை வழங்க தமிழக அரசு ஆலோசித்து வரும் நிலையில் இதை அறிவித்த அமைச்சர் முத்துசாமி முக்கால்பவுன் மோதிரம் பரிசாக கொடுப்பதாக மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கத் தலைவர் செல்லபாண்டியன் தெரிவித்துள்ளார்.

மது நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிருக்கும் கேடு என பாட்டிலில் சிறிய எழுத்துகளில் எழுதி வைத்திருந்தாலும் குடிமகன்கள் அதை குடிக்காமல் விடுவதில்லை. ஒரு முறை ருசி கண்டுவிட்டால் அன்றாடம் கணக்கு வழக்கு இல்லாமல் புல் பாட்டிலை இறக்குவோரும் இருக்கிறார்கள்.

Madhu kudippor Vizhipunarvu Sangam Chellapandiyan will present gold ring for minister for tetra pack

இதனால் பல குடும்பங்கள் ஆதரவற்று கிடக்கின்றன. சிறிய வயதில் கணவனை இழந்து பூ பொட்டில்லாமல் பெண்கள் கஷ்டப்படுகிறார்கள். அது போல் குழந்தைகளும் விளையாட வேண்டிய வயதில் அப்பாவை இழந்துவிட்டு தவிக்கிறார்கள்.

இதனால் மதுக்கடைகளை மூட வேண்டும் என்றும் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள், சமூகநல ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் கேட்டு வருகிறார்கள். ஆனால் மதுவிலக்கு கொண்டு வந்தால் கள்ளச்சாராயம் தலைத்தூக்கும், இல்லாவிட்டால் அண்டை மாநிலத்திற்கு சென்றாவது கள்ளச்சாராயம் குடிப்பதை வழக்கமாக்கி கொள்வர்.

இதனால் இறப்புகள் ஏற்படும். தஞ்சை மற்றும் மயிலாடுதுறை பகுதிகளில் கடந்த 2 மாதங்களில் அரசு மதுபான கடையில் மது குடித்த 4 பேர் மர்மமான முறையில் இறந்தனர். அவர்கள் அருந்திய மதுவில் சயனைட் எனும் நஞ்சு கலக்கப்பட்டிருந்ததே மரணத்திற்கு காரணம் என தெரியவந்தது.

இதையடுத்து அரசு விற்பனைசெய்யும் டாஸ்மாக் மதுபானத்தில் சயனைட் கலந்தது எப்படி? என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. மேலும் மதுக்கடைகளில் விற்பனையாகும் மதுவின் பாதுகாப்பை உறுசி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன.

Madhu kudippor Vizhipunarvu Sangam Chellapandiyan will present gold ring for minister for tetra pack

போலி மதுபானம், மதுவில் கலப்படம் செய்வது உள்ளிட்ட பிரச்சினைகளைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க முயற்சித்து வருகிறது. அந்த வகையில் கண்ணாடி பாட்டில்களுக்கு பதில் டெட்ரா பாக்கெட் எனும் காகித பெட்டிகளில் மதுவை வழங்க தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. மதுபானத்தை டெட்ரா பாக்கெட்டுகளில் கொண்டு வந்தால் கலப்படம் தவிர்க்கப்படும்என மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் முத்துசாமி தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் மதுபாட்டில்களை டெட்ரா பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்தால் மறுசுழற்சி செய்யும் போது விவசாயிகளுக்கு நன்மை ஏற்படும் என தெரிவித்திருந்தார். 90 மில்லி மதுபானத்தை காகித குடுவையில் கொடுக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தெரிகிறது என அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அமைச்சர் முத்துசாமிக்கு முக்கால் பவுன் மோதிரம் பரிசாக வழங்கப்படும் என மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத் தலைவர் செல்லபாண்டியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மில்லி டாஸ்மாக் மதுபானத்தில் தேவையான அளவு தண்ணீர் கலந்து ... ஒரே பாக்கெட்டாக விற்பனை செய்ய வேண்டும்.

டெட்ரா பாக்கெட்டாக மது விற்பனை செய்வதால் பிளாஸ்டிக் டம்ளர், வாட்டர் பாட்டில் வாங்குவது பார்களில் குறையும். அதனால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். ஒரே பாக்கெட்டில் ஒரே மடக் மடக் இதை அமல்படுத்தினால் அமைச்சருக்கு முக்கால் பவுன் மோதிரம் பரிசாக சங்கம் சார்பில் வழங்கப்படும் என செல்லபாண்டியன் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+