Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மெட்ராஸ் டே 385: இந்தியாவை அளக்க அஸ்திவாரமிட்ட சென்னை! செயின்ட் தாமஸ் மவுண்ட் வரலாறு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவின் மிக முக்கிய நகரமாக இருக்கும் சென்னையின் வரலாறு, 16ம் நூற்றாண்டில் தொடங்கியது. சென்னைக்கு என பல்வேறு வரலாற்று பெருமைகள் இருக்கின்றன. ஆனால் சென்னையால் இந்தியாவுக்கே பெருமை என்றால், அது பரங்கிமலை எனப்படும் செயின்ட் தாமஸ் மவுண்ட்தான். 'மெட்ராஸ் டே 385' இன்று கொண்டாடப்படும் நிலையில், இது குறித்த தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.

அதாவது இந்த கதை இப்படித்தான் தொடங்குகிறது. உலகத்திற்கும், இந்த மனித சமூகத்திற்கும் நன்மை தரும் செயல் எதுவெனில் அது ஊர் சுற்றுவதுதான். இதுவரை நாம் பெற்றிருக்கும் அறிவு தகவல்கள் ஊர் சுற்றிகளின் அனுபவ களஞ்சியத்திலிருந்துதான் பெறப்பட்டிருக்கிறது. புத்தர், இயேசு, ஆதிசங்கரர் என மதத் தலைவர்களாக இருந்தாலும் சரி, சார்லஸ் டார்வின் போன்ற அறிவியலாளர்களாக இருந்தாலும் சரி அவர்கள் அத்துனை பேரும் மகா ஊர் சுற்றிகளே.

madras day chennai day chennai

இப்படியான பிரிட்டிஷ் ஊர் சுற்றி குழு ஒன்று, இந்தியா முழுவதும் பயணித்து, இந்தியாவை அளந்து, உலகின் மிகப்பெரிய சிகரம் எவரெஸ்ட் என்பதையும் கண்டுபிடித்து சொல்லியிருக்கிறது.

மைசூர் போரில் திப்பு சுல்தானை வெற்றிக்கொண்ட பின்னர் இங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை ஏறத்தாழ முழுமையாக தானதாக்கியிருந்தது. ஆனால் இந்திய துணைகண்டத்தின் நிலப்பரப்பு ஆங்கிலேயர்களை அச்சுறுத்தியது. பாலைவனம், சமவெளி, மழைக்காடுகள், பனி படர்ந்த பகுதிகள் என அவர்களை இந்நிலப்பரப்பு சுழற்றியடித்தது. எனவே முதல் பணியாக இந்தியாவின் நிலப்பரப்பை சரியாக புரிந்துக்கொள்வதென அவர்கள் முடிவெடுத்தார்கள். இதற்காக ஒரு சிறப்பு அதிகாரியை நியமித்தார்கள். அவர்தான் மகா ஊர்சுற்றி வில்லியம் லாம்டன்.

எங்கு போனாலும் புதிய நிலப்பரப்பில் சாவகாசமாக ரவுண்டு அடித்து, அதன் தன்மையை உணர்ந்து கொள்வதில் லாம்டன் பெரும் ஈடுபாடு கொண்டிருந்தார். இதுவே அவரை சிறந்த ஊர்சுற்றியாகவும், நில அளவையாளராகவும் மாற்றியது. இப்படிதான் இந்தியாவையும் அளக்க முடிவெடுத்து அதற்கான பணியை சென்னையிலிருந்து தொடங்கினார்.

இது ஒரு முக்கோண அளவியல் முறை. அதாவது பரங்கிமலையிலிருந்து நேராக 45 டிகிரி கோணத்தில் இரண்டு கற்பனை கோடுகளை போட வேண்டும். பின்னர் இந்த கோடுகளை இணைக்க மூன்றாது கோடு போட வேண்டும். இப்படி மூன்று கோடுகளையும் இணைத்தால் முக்கோணம் வரும். இதனை கொண்டு அந்த பகுதியின் நீளம் எவ்வளவு? மலைகளின் உயரம் என்ன? என்பது போன்ற தகவல்களை தெரிந்துக்கொள்ள முடியும். இதை வைத்துதான் இந்தியாவை பிரிட்டிஷ்காரர்கள் அளவிட்டார்கள்.

madras day chennai day chennai

இந்த அளவீடுகளின் இறுதியில் எவரெஸ்ட் சிகரம்தான் உலகின் மிகப்பெரியது என்பதையும் அவர்கள் கண்டுபிடித்தார்கள். இந்த பெருமைக்கு அடித்தளமிட்டது சென்னைதான்.

இன்று நவீன இந்தியாவின் ஜீரோ பாயிண்ட் எது என கேட்டால் நாக்பூர் என எளிதாக சொல்லிவிடலாம். ஆனால் 1800களில் இந்தியாவின் ஜீரோ பாயிண்டாக தமிழ்நாடு இருந்தது. அதுவும் சென்னையில்தான் இந்தியாவின் முதல் மைல் கல் நடப்பட்டது. 1802ல் சென்னையின் பரங்கிமலை எனப்படும் செயின்ட் தாமஸ் குன்றில்தான் இந்த மைல்கல் நடப்பட்டது.

ஆங்கிலேயர் வருகைக்கு பின்னர் சென்னப்பட்டனம், மெட்ராஸாக மாறியிருந்தது. இந்த மெட்ராஸ் உருவாகி இன்று 385 ஆண்டுகள் ஆகின்றன. அந்த வகையில் இன்று மெட்ராஸின் வரலாற்றையும் நினைவுகூர்வோம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+