Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாற்றுத்திறனாளி வழக்கறிஞரை தாக்கிய எஸ்.ஐ. - "ரூ.5 லட்சம் இழப்பீடு".. உயர் நீதிமன்றம் 'பரபர' உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மனித உரிமை மீறல் தொடர்பான வழக்கில் மாற்றுத்திறனாளி வழக்கறிஞருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், மாற்றுத் திறனாளிகளை கையாள்வது குறித்து போலீஸாருக்கு பயிற்சி வழங்க வேண்டும் என தமிழக டிஜிபி-க்கும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மேற்கண்ட உத்தரவை பிறப்பித்திருக்கிறது.

 தாக்கப்பட்ட மாற்றுத்திறனாளி வழக்கறிஞர்

தாக்கப்பட்ட மாற்றுத்திறனாளி வழக்கறிஞர்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள முத்துநகரைச் சேர்ந்தவர் முருகானந்தம். வழக்கறிஞரான இவர் மாற்றுத்திறனாளி ஆவார். இவர் மீது அதே பகுதியைச் சேர்ந்த தண்டபாணி என்பவர் அளித்த புகார் தொடர்பாக, தாராபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் என்பவர் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வழக்கறிஞர் முருகானந்தத்தை கைது செய்துள்ளார். அப்போது, தான் மாற்றுத்திறனாளி எனக் கூறிய பின்னரும், முருகானந்தத்தை எஸ்.ஐ. கார்த்திகேயன் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், அவரை ஆபாச வார்த்தைகளில் திட்டியதாகவும் தெரிகிறது.

மனித உரிமை ஆணையத்தில் புகார்

மனித உரிமை ஆணையத்தில் புகார்

பின்னர் கோவை சிறையில் அடைக்கப்பட்ட முருகானந்தம், அதே ஆண்டு மார்ச் மாதம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, தனக்கு நேர்ந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் வழக்கறிஞர் முருகானந்தம் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த மாநில மனித உரிமை ஆணையம், வழக்கறிஞர் முருகானந்தத்துக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கவும், அவரை தாக்கிய போலீஸ் எஸ்.ஐ.க்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

உயர் நீதிமன்றத்தில் அப்பீல்

உயர் நீதிமன்றத்தில் அப்பீல்

மாநில மனித உரிமை ஆணையத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்தும், தனக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரியும் வழக்கறிஞர் முருகானந்தம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேலும் தனது மனுவில், "தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய வசதிகளை செய்து கொடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்றும் முருகானந்தம் தனது மனுவில் கூறியிருந்தார்.

ரூ.5 லட்சம் வழங்க உத்தரவு..

ரூ.5 லட்சம் வழங்க உத்தரவு..

இந்த மனுவானது, நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், "பாதிக்கப்பட்ட முருகானந்தத்துக்கு இழப்பீடாக 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்" என உத்தரவிட்டனர். இந்த தொகையில் ரூ. 4 லட்சத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். மேலும், மாற்றுத் திறனாளிகளை கையாள்வது தொடர்பாக காவலர் முதல் அனைத்து போலீஸ் அதிகாரிகளுக்கும் பயிற்சி வழங்க வேண்டும் என தமிழக டிஜிபி-க்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதேபோல, தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்களை பராமரிப்பது தொடர்பாக மாவட்டந்தோறும் அதிகாரியை நியமிக்க வேண்டும் எனவும் டிஜிபிக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+