மாற்றுத்திறனாளி வழக்கறிஞரை தாக்கிய எஸ்.ஐ. - "ரூ.5 லட்சம் இழப்பீடு".. உயர் நீதிமன்றம் 'பரபர' உத்தரவு
சென்னை: மனித உரிமை மீறல் தொடர்பான வழக்கில் மாற்றுத்திறனாளி வழக்கறிஞருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், மாற்றுத் திறனாளிகளை கையாள்வது குறித்து போலீஸாருக்கு பயிற்சி வழங்க வேண்டும் என தமிழக டிஜிபி-க்கும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மேற்கண்ட உத்தரவை பிறப்பித்திருக்கிறது.

தாக்கப்பட்ட மாற்றுத்திறனாளி வழக்கறிஞர்
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள முத்துநகரைச் சேர்ந்தவர் முருகானந்தம். வழக்கறிஞரான இவர் மாற்றுத்திறனாளி ஆவார். இவர் மீது அதே பகுதியைச் சேர்ந்த தண்டபாணி என்பவர் அளித்த புகார் தொடர்பாக, தாராபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் என்பவர் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வழக்கறிஞர் முருகானந்தத்தை கைது செய்துள்ளார். அப்போது, தான் மாற்றுத்திறனாளி எனக் கூறிய பின்னரும், முருகானந்தத்தை எஸ்.ஐ. கார்த்திகேயன் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், அவரை ஆபாச வார்த்தைகளில் திட்டியதாகவும் தெரிகிறது.

மனித உரிமை ஆணையத்தில் புகார்
பின்னர் கோவை சிறையில் அடைக்கப்பட்ட முருகானந்தம், அதே ஆண்டு மார்ச் மாதம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, தனக்கு நேர்ந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் வழக்கறிஞர் முருகானந்தம் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த மாநில மனித உரிமை ஆணையம், வழக்கறிஞர் முருகானந்தத்துக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கவும், அவரை தாக்கிய போலீஸ் எஸ்.ஐ.க்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

உயர் நீதிமன்றத்தில் அப்பீல்
மாநில மனித உரிமை ஆணையத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்தும், தனக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரியும் வழக்கறிஞர் முருகானந்தம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேலும் தனது மனுவில், "தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய வசதிகளை செய்து கொடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்றும் முருகானந்தம் தனது மனுவில் கூறியிருந்தார்.

ரூ.5 லட்சம் வழங்க உத்தரவு..
இந்த மனுவானது, நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், "பாதிக்கப்பட்ட முருகானந்தத்துக்கு இழப்பீடாக 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்" என உத்தரவிட்டனர். இந்த தொகையில் ரூ. 4 லட்சத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். மேலும், மாற்றுத் திறனாளிகளை கையாள்வது தொடர்பாக காவலர் முதல் அனைத்து போலீஸ் அதிகாரிகளுக்கும் பயிற்சி வழங்க வேண்டும் என தமிழக டிஜிபி-க்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதேபோல, தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்களை பராமரிப்பது தொடர்பாக மாவட்டந்தோறும் அதிகாரியை நியமிக்க வேண்டும் எனவும் டிஜிபிக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications