வருமான வரித்துறை வழக்கு- கார்த்தி சிதம்பரத்தின் கோரிக்கையை நிராகரித்தது உயர்நீதிமன்றம்!
Recommended Video
சென்னை: தம் மீதான வருமான வரித்துறையின் வழக்கை சென்னை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க கூடாது என்ற காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராக்கரித்துள்ளது.
கார்த்தி சிதம்பரம் மீது வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கை எம்.பி., எம்.ல்.ஏக்களை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த விசாரணைக்கு தடை கோரியும் சென்னை எழும்பூர் நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்றக் கோரியும் கார்த்தி சிதம்பரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இம்மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆதிகேசவலு இன்று நிராகரித்தார். இவ்வழக்கில் தலைமை பதிவாளர் பதில் மனு தாக்கல் செய்யும் வரை எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என நீதிபதி ஆதிகேசவலு தெரிவித்தார்.
மேலும் தமிழக அரசு, வருமான வரித்துறை, உயர்நீதிமன்ற பதிவாளர் ஆகியோர் ஆகஸ்ட் 30-க்குள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.
வழக்கு என்ன?
2015-16-ம் ஆண்டு வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்த கார்த்தி சிதம்பரம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு கிராமத்தில் உள்ள 1.18 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்ததை தெரிவிக்கவில்லை. இந்த விற்ப்பனையின் மூலம் கிடைத்த ரூ 1.35 கோடி வருமானத்தை தமது கணக்கில் கார்த்தி சிதம்பரம் காட்டவில்லை என்பது வழக்கு.
கார்த்தி சிதம்பரம். அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிராக வருமான வரித்துறை 2018-ல் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு சென்னை எழும்பூர் பொருளாதார குற்ற வழக்குகள் நீதிமன்றத்தில் இருந்து எம்.பி.- எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இதை எதிர்த்துதான் கார்த்தி சிதம்பரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications