அடி மேல் அடி.. சீமானுக்கு முளைத்த புதிய சிக்கல்! போலீஸுக்கு ஹைகோர்ட் போட்ட ஆர்டர்.. மேட்டர் சீரியஸ்!
சென்னை: நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசிய நாம் தமிழர் கட்சி சீமான் மீதான வழக்கை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அந்த வழக்கு ஆவணங்களை தாக்கல் செய்ய காவல்துறை தரப்பு தயாராகி வருகிறது. வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் பட்சத்தில் சீமான் மீது கூடுதலாக ஒரு வழக்கு பதிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், நீதித் துறையை அவமதிக்கும் வகையிலும், நீதிமன்ற செயல்பாடுகளை மோசமாக விமர்சித்து ஆபாச வார்த்தைகளால் பேசியதாகக் கூறி, வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர், தமிழக டிஜிபிக்கு புகார் அளித்திருந்தார்.

அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை தள்ளுபடி செய்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், ஒரு அரசியல் கட்சித் தலைவர் சட்டபூர்வமாகவும் கண்ணியத்துடன் பேச வேண்டும் என்றும் ஆனால் அவருடைய பேச்சு அரசியலமைப்புச் சட்ட விரோத பேச்சாக இருந்ததாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும், எழும்பூர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, தனது புகார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் சுகேந்திரன் ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, கீழ் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 16ஆம் தேதி ஒத்தி வைத்துள்ளார்.
சீமான்: இதையடுத்து அந்த வழக்கு ஆவணங்களை தாக்கல் செய்ய காவல்துறை தரப்பு தயாராகி வருகிறது. வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் பட்சத்தில் சீமான் மீது கூடுதலாக ஒரு வழக்கு பதிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. சீமான் ஆவேசமாகவும் அதிரடியாகவும் அதே நேரத்தில் சில நேரங்களில் சர்ச்சையாக பேசுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். அப்படித்தான் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சர்ச்சையில் சிக்கினார். யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த சீமான் நீதித்துறை, நீதிபதிகள் , மற்றும் நீதிமன்ற செயல்பாடுகள் குறித்து நேரடியாக விமர்சித்து இருந்தார்.
இடையில் சில ஆபாச வார்த்தைகள் பேசியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நீதித்துறை குறித்து அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞரான சார்லஸ் அலெக்சாண்டர் தமிழக டிஜிபிக்கு புகார் கொடுத்தார். அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தான் தற்போது அந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் அலெக்சாண்டர் மனு தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
Savukku Shankar: சவுக்கு சங்கர் நாளைக்குள் சரண் அடைய வேண்டும்.. இல்லையென்றால் கைது செய்யலாம்! ஐகோர்ட் அதிரடி -
அண்ணா நகர் சிறுமி வழக்கு.. தினமும் விசாரணை நடத்தி விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு! -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications