நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. தமிழக அரசின் சமூக நலத்துறை செயலாளர் ஆஜராக உத்தரவு
சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை செயலாளர் ஜெயஶ்ரீ முரளிதரன் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த விக்ரம் என்பவரின் தாய் அங்கன்வாடி ஊழியராக பணியாற்றி வந்த நிலையில் உயிரிழந்தார். இதனையடுத்து கருணை அடிப்படையில் தமக்கு அந்த வேலையை வழங்கக்கோரி விக்ரம் மனு அளித்தார்.

கருணை அடிப்படையில் பெண் வாரிசிகளுக்கு மட்டுமே அங்கன்வாடி ஊழியர் வேலை வழங்க முடியும் எனக்கூறி விக்ரமின் மனு நிராகரிக்கப்பட்டது. இதனை எதிர்த்து விக்ரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அதில், பெண் வாரிசுகளுக்கு மட்டுமே கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படும் என்ற அரசானையை உயர் நீதிமன்றம் ரத்து செய்த நிலையில் தனக்கு வேலை மறுக்கப்பட்டதாக கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கருணை அடிப்படையில் விக்ரமுக்கு வேலை வழங்குவது குறித்து எட்டு வாரங்களில் முடிவெடுக்கும்படி கடந்த 2024ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை செயல்படுத்தவில்லை எனக்கூறி விக்ரம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், ஏப்ரல் ஒன்றாம் தேதி நேரில் ஆஜராகுமாறு சமூக நலத்துறை செயலாளர் ஜெயஶ்ரீ முரளிதரனுக்கு உத்தரவிட்டு விசாரணையை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தார்.
-
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம்












Click it and Unblock the Notifications