நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. தமிழக அரசின் சமூக நலத்துறை செயலாளர் ஆஜராக உத்தரவு
சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை செயலாளர் ஜெயஶ்ரீ முரளிதரன் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த விக்ரம் என்பவரின் தாய் அங்கன்வாடி ஊழியராக பணியாற்றி வந்த நிலையில் உயிரிழந்தார். இதனையடுத்து கருணை அடிப்படையில் தமக்கு அந்த வேலையை வழங்கக்கோரி விக்ரம் மனு அளித்தார்.

கருணை அடிப்படையில் பெண் வாரிசிகளுக்கு மட்டுமே அங்கன்வாடி ஊழியர் வேலை வழங்க முடியும் எனக்கூறி விக்ரமின் மனு நிராகரிக்கப்பட்டது. இதனை எதிர்த்து விக்ரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அதில், பெண் வாரிசுகளுக்கு மட்டுமே கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படும் என்ற அரசானையை உயர் நீதிமன்றம் ரத்து செய்த நிலையில் தனக்கு வேலை மறுக்கப்பட்டதாக கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கருணை அடிப்படையில் விக்ரமுக்கு வேலை வழங்குவது குறித்து எட்டு வாரங்களில் முடிவெடுக்கும்படி கடந்த 2024ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை செயல்படுத்தவில்லை எனக்கூறி விக்ரம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், ஏப்ரல் ஒன்றாம் தேதி நேரில் ஆஜராகுமாறு சமூக நலத்துறை செயலாளர் ஜெயஶ்ரீ முரளிதரனுக்கு உத்தரவிட்டு விசாரணையை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications