மேற்கு மாம்பலம் பிரபல தனியார் பள்ளி.. நிபந்தனைபடி இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை.. ஐகோர்ட்
சென்னை: சென்னை மேற்கு மாம்பலத்தில் ஸ்ரீ சீத்தாராம் வித்யாலயா என்ற பள்ளிக்கூடத்தை ஸ்ரீராம் சமாஜ் என்ற சங்கம் நடத்தி வருகிறது. இந்த சங்கம், குடியிருப்பு கட்டிடம் என்று தரை தளம் மற்றும் 2 மாடிகளுடன் கூடிய கட்டிடம் கட்ட அனுமதி பெற்றது. ஆனால், தரை தளம் மற்றும் 3 மாடிகள் கொண்ட கட்டிடத்தை கட்டி, அதில் பள்ளிக்கூடத்தை நடத்தி வருகிறது. இந்த பள்ளியின் அங்கீகாரம் தொடர்பாக மெட்ரிக்குலேசன் பள்ளி இயக்குனருக்கு சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது.
சென்னை மேற்கு மாம்பலம் ராமகிருஷ்ணாபுரத்தில் ஸ்ரீ சீத்தாராம் வித்யாலயா என்ற பள்ளிக்கூடத்தை ஸ்ரீராம் சமாஜ் என்ற சங்கம் கடந்த 1987ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது. ப்ரிகேஜி முதல் 12ம் வகுப்பு வரை இங்கு செயல்படகிறது. இப்பள்ளியை நடத்தும் ஸ்ரீராம் சமாஜ் சங்கம், குடியிருப்பு கட்டிடம் என்று தரை தளம் மற்றும் 2 மாடிகளுடன் கூடிய கட்டிடம் கட்ட அனுமதி பெற்றதாக கூறப்படுகிறது.

ஆனால், தரை தளம் மற்றும் 3 மாடிகள் கொண்ட கட்டிடத்தை கட்டி, அதில் பள்ளிக்கூடத்தை ஸ்ரீராம் சமாஜ் சங்கம் நடத்துகிறது என கூறப்படுகிறது. இதனால் இந்த தனியார் பள்ளிக்கூடத்துக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை புதுப்பிக்க கோரும் விண்ணப்பம் கடந்த 2022-ம் ஆண்டு நிராகரிக்கப்பட்டது. இதனை எதிர்த்து பள்ளி நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் பிறப்பித்த உத்தரவில், "பள்ளிக்கூட கட்டிட திட்ட அனுமதி சான்றிதழை சமர்பிக்கவேண்டும் என்ற நிபந்தனையுடன் பள்ளிக்கூடத்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. அந்த சான்றிதழை தாக்கல் செய்யாததால், அந்த அங்கீகாரத்தை புதுப்பிக்கும் விண்ணப்பத்தை நிராகரித்து உத்தரவிட்டுள்ளதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
எனவே, பள்ளி அங்கீகாரத்தை புதுப்பிக்கக்கோரி ஸ்ரீராம் சமாஜ் அமைப்பு 2 வாரத்துக்குள் மீண்டும் மனு கொடுக்கவேண்டும். அந்த மனுவை மெட்ரிக்குலேசன் பள்ளி இயக்குனர் ஆய்வு செய்து, அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்யவேண்டும். அவ்வாறு நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை என்றால், சட்டப்படி பள்ளிக்கூடத்தின் மீது இயக்குனர் நடவடிக்கை எடுக்கவேண்டும்" இவ்வாறு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் தீர்ப்பில் கூறியுள்ளார்.
இந்நிலையில் தான் இப்போது நடந்து வரும் வழக்கில் பள்ளி அங்கீகாரத்தை புதுப்பிக்கக்கோரி ஸ்ரீராம் சமாஜ் அமைப்பு 2 வாரத்துக்குள் மீண்டும் மனு கொடுக்கவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த மனுவை மெட்ரிக்குலேசன் பள்ளி இயக்குனர் ஆய்வு செய்து, அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்யவேண்டும். அவ்வாறு நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.
-
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
அதிகாலையில் ஷாக்! தாறுமாறாக உயர்ந்த விமான கட்டணம்! சென்னை-தூத்துக்குடிக்கு டிக்கெட் ரேட்டை பாருங்க -
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டிரான்ஸ்பரான சந்தீப் ராய் ரத்தோர் டிஜிபியானது எப்படி? இரவில் நடந்தது என்ன? -
சென்னைவாசிகளுக்கு மிக பெரிய நிம்மதி.. சீரானது புறநகர் ரயில் சேவை.. வழக்கமான அட்டவணையில் இயக்கம்! -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
LPG கேஸ் சிலிண்டர் பதுக்கினால் குண்டர் சட்டம் பாயும் - தமிழ்நாடு அரசு அதிரடி எச்சரிக்கை! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications